பெய்சிங் ஒலிம்பிக் போட்டிகள் புகையில்லா, புகையிலையில்லா ஒலிம்பிக் போட்டிகளாக நடத்தப்படும். பெய்சிங் ஒலிம்பிக் போட்டிகளின்போது, முக்கியமான அரங்குகள், குறிப்பாக போட்டிகள் நடைபெறும் அரங்குகளில் புகை பிடிக்க தடை விதிக்கப்படும். குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் புகை பிடிப்பவர்களுக்காக சிறப்பு வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும். விளையாட்டு அரஙங்கள் உள்ளிட்ட சிறப்பு பகுதிகளில் இப்படி புகை பழக்கம் உள்ளவர்களுக்கு தனியாக புகை பிடிக்க வசதிகள் செய்யப்படுவது போலவே, இதர பொது இடங்களிலும் புகை பிடிக்க சிறப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும். பொதுவில் கண்ட இடத்தில் புகை பிடிப்பதை தடுக்கும் முகமாய் இந்த ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளன. உலக சுகாதார அமைப்பும் சர்வதேச் அஒலிம்பிக் குழுமமும் ஏற்கனவே புகையில்லா ஒலிம்பிக் போட்டிகள் தொடர்பான பல உடன்பாடுகளை எட்டியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
|