கலை.......ஓ முடியும். லீ காய் சியாங் எனும் முதியோர் வயிற்றுப் புண் நோயால் பீடிக்கப்பட்டார். இது வரை 2200 யுவான் செலவழித்தார். கூட்டுறவு மருத்துவ முறையில் சேர்ந்ததால் மருத்துவக் கட்டணம் ஆயிரம் யுவான் குறைக்கப்பட்டது. இதை கண்டு அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். தம் குடும்பத்தினர் புதிய ரக கூட்டுறவு மருத்துவ முறையில் சேர்ந்தததாக அவர் கூறினார். இந்த முறைமை மிகவும் சிறப்பாக உள்ளது. நோயாளிகளின் சுமை பெரிதும் குறைந்துள்ளது என்றும் அவர் கருதிகிறார். ராஜா.......இந்த மருத்துவ முறை நடைமுறைக்கு வந்த பின் பிரச்சினைகள் ஏதேனும் ஏற்பட்டனவா?

கலை......பிரச்சினைகள் ஏற்பட்டதுண்டு. மருத்துவ வசதிகள் இன்மை, மருத்துவர்களின் தரக்குறைவு உள்ளிட்ட பிரச்சினைகள் உள்ளூர் மக்களின் உடல் நலத்தை இன்னமும் பாதிக்கின்றன. மாச்சான் வட்ட மருத்துவ கிளினிகின் செவியலியார் ச்சாங் யா லிங் இது பற்றி கூறுகிறார்.
பொதுவாக கூறின் தடுமன் போன்ற சாதாரண நோய்களுக்கு சிகிச்சை செய்ய எங்களால் முடியும். ஆனால் கடும் நோய்வாய்பட்டால் மாவட்ட மருத்துவ மனைக்குச் செல்ல பரிந்துரைப் போம். எடுத்துக் காட்டாக இப்போது எங்களிடம் எக்ஸ்ரே இயந்திரம் ஒன்று உண்டு. ஆனால் அதை எப்படி பயன்படுத்துவது என்று எங்களுக்குக்கே தெரியாது. மாவட்ட நகரிலுள்ள மருத்துவர்களிடம் கற்றுக் கொண்டால் நல்லது. ஆகவே நாங்கள் வெளியூருக்குப் போய் பயிற்சி பெற ஆவருடன் இருக்கிறோம் என்றார். ராஜா........புதிய பிரச்சினைகளை எவ்வாறு தீர்க்க வேண்டும்?

கலை......புதிய பிரச்சினைகளைத் தீர்க்கும் பொருட்டு பான் சியென் மாவட்ட அரசு சுறுசுறுப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. முதலில் திறமைசாலிகளை விநியோகிக்கும் போது கிராமிய மருத்துவ கிளினிகிற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். பட்டம் பெற்ற பல்கலைக்கழக மாணவர்களை கிராமிய கிளிகிக்கிற்கு நோய்பணி புரியும் தூண்ட வேண்டும். மாவட்ட நிலை மருத்துவ மனை டாக்டர்களை கிராமிய கிளினிகில் குறுகிய கால பணி புரிவதற்கு ஊக்கமளிக்க வேண்டும். இரண்டாவதாக அரசின் முன்னுரிமைக் கொள்கை மற்றும் அரசு கடன் பத்திரம் ஆகியவற்றை பயன்படுத்துதன் மூலம் கிராமிய கிளினிக் மருத்துவ வசதிகளை மேம்படுத்த வேண்டும். இதற்கு பான் சியென் மாவட்ட அரசு 10 லட்சம் யுவானை ஒதுக்கீடு செய்துள்ளது. தவிரும் மருத்துவ ஊழியர்களுக்கான குறிப்பாக கிராமிய கிளினிக் பணியர்களுக்கான பயிற்சியை வலுப்படுத்த வேண்டும். அதனிடையில் அவர்களுடைய. கல்வி தரத்தை உயர்த்துவதுடன் தலைசிறந்த கொள்கையையும் வசதிகளையும் வழங்க வேண்டும்.

ராஜா.......இது தவிர கிராமப்புறங்களில் தனியார் மருத்துவர்கள் இருக்கின்றார்களா? கலை.......இருக்கிறார்கள். சில கிராமங்களில் சிறு தனியார் மருத்துவ மனைகள் உள்ளன. அரசு மருத்துவ அமைப்புகள் பற்றாக்குறை என்ற பிரச்சினையை ஓரளவு இது தீர்த்துள்ளது. விவசாயிகள் சாதாரண நோய்வாய்பட்டால் இத்தகைய தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெறலாம். ஆனால் இத்தகைய மருத்துவ நிலையம் தனது பணியில் சில இன்னல்கலையும் சந்தித்துள்ளன. திரு வாங் சிங் 10 ஆண்டுகளாக தனியார் மருத்துவராக வருகிறார். இது பற்றி அவர் கூறியதாவது. ராஜா......இங்கு பொருளாதார நிலை மிகவும் மோசமாக இருப்பதால் பொது மக்கள் மருத்துவ சிகிச்சை பெறுவதற்கு சிரமமாக உள்ளது. சில நோயாளிகள் நிமோனியா நோயால் பிடிக்கப்பட்டு காய்ச்சல் முற்றி இங்கு வந்து சிகிச்சைக்கு வந்த போது ஒரு சில யுவான் மட்டுமே கொண்டு வருகிறார்கள். மருத்துவர்களாகிய எங்களைப் பொறுத்த வரை வேறு வழியில்லாமல் அவர்களுக்கு சிகிச்சை செய்தோம். பலர் இதுவரையிலும் எங்களிடம் கடன்பட்டிருக்கிறார்கள் என்றார் அவர்.

உள்ளூர் அரசு இதைக் கருத்தில் கொண்டு தனிப்பட்ட மருத்துவரின் பணிக்கு உரிய ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் வாங் சிங் விருப்பம் தெரிவித்தார். கலை......நேயர்கள் இதுவரை சீனாவின் வறிய வட்டாரங்கில் மருத்துவ சுகாதார நிலைமை பற்றி கேட்டீர்கள். ராஜா....அடுத்த முறை மீண்டும் சந்திப்போம்.
|