ஏப்ரல் முதல் நாள், பெய்ஜிங்கின் 23வது மரம் நடும் நாளாகும். பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி ஊனமுற்றோர் ஒலிம்பிக் போட்டி ஆகியவற்றுக்கான தன்னார்வத் தொண்டர்களும் பெய்ஜிங்கின் இளைஞர்களுமாக 1000 பேர் தூய்மையான நாள் என்ற தலைப்பில் சுற்றுச்சூழலை அழகுப்படுத்தும் வகையில் புறநகர் பிரதேசத்தில் மரம் நடும் தன்னார்வ நடவடிக்கைகளில் பங்கேற்றனர்.
அவர்கள், சமூகத்தின் பல்வேறு துறைகளின் பிரதிநிதிகளுடன் இணைந்து 2008ம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கான விளையாட்டுக்களரியில் தன்னார்வ தொண்டர்கள் சுற்றுசூழலை அழகுப்படுத்தும் நடவடிக்கையை நடத்தினர். இங்கு 2008 மரங்கள் நடப்படும்.
அத்துடன் தாசிங் பிரதேசத்தில் தேசிய இன மற்றும் மத வட்டாரங்களிலிருந்து வந்த 300க்கு அதிகமான இளைஞர்கள், ஒற்றுமை நாட்டுப்பற்று ஆகியவற்றைக் குறிக்கும் மரங்களை நட்டனர்.
கடந்த வாரத்தின் இறுதியில் பெய்ஜிங்கில் ஒரு லட்சத்துக்கு மேலானோர் தூய்மையான நாள் என்ற நடவடிக்கையில் கலந்துகொண்டனர்.
|