பெய்சிங் SOS குழந்தை கிராமம்
cri
பெய்சிங் SOS குழந்தை கிராமத்தின் அடிக்கல் நாட்டு விழா இன்று பெய்சிங்கில் நடைபெற்றது. இது வரை சீனாவில் நிறுவப்படும் மிகப் பெரிய குழந்தை கிராமம் இதுவாகும். சீன-சர்வதேச SOS குழந்தை கிராமத்தின் ஒத்துழைப்புடன் நிறுவப்படும் 10வது குழந்தை கிராமமும் இது. 120 அனாதைக் குழந்தைகள் இக்கிராமத்தில் சேர்க்கப்படுவர். 23 ஆயிரம் சதுர மீட்டர் நிலப்பரப்புடைய இக்குழந்தை கிராமம், 2008ஆம் ஆண்டின் முற்பாதியில் கட்டிமுடிக்கப்படும். இக்கிராமத்தின் அனாதைக் குழந்தைகள் வேலை வாய்ப்பு பெறும் வரை, அவர்களுக்கு தேவையான வாழ்க்கை மற்றும் கல்வி வசதிகளை சர்வதேச SOS குழந்தை கிராமம் வழங்கும்.
|
|