• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-04-09 11:21:21    
குடும்பத்தினர் அடிக்கடி பயன்படும் மருந்து(பகுதி 2 )

cri

இரண்டாவதாக மருந்துகளை வைக்கும் இடங்களையும் தேர்ந்தெடுக்க வேண்டும். காகித பொட்டலத்திலோ லாட்சிக்குள்ளோ வைத்திருக்கத் தேவை இல்லை. காகித பெட்டியில் வைத்திருந்தால் ஈரம் பிடிக்கும். லாச்சிக்குள் வைத்திருந்தால் தூசி படியும். மருந்துகளுக்கு மாசு ஏற்படும். துருபிடியாத உருக்குகளால் அல்லது பிளாஸ்டிக்களால் செய்யப்படும் பெட்டிகளில் வைத்திருப்பது மிகவும் நல்லது. தவிரவும் மருந்து பெட்டிகளை வெயில் படாத படி காற்றோட்டமுள்ள இடங்களில் வைத்திருக்க வேண்டும். சில சிறப்பு மருந்துகளை குளிர் பதன பெட்டியில் வைத்திருக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக அவற்றை குழந்தைகளுக்கு எட்டாத இடங்களில் வைத்திருக்க வேண்டும். தவிரவும் சிலர் மருந்துகளைச் சேமித்து வைத்திருக்கும் போது இட பரப்பைச் சிக்கனப்படுத்தும் வகையில் மருந்து பயன்பாடு பற்றிய குறிப்பேடுகளை வீசியெறிவர்.

உண்மையில் இப்படி செய்வது தப்பு. ஏனெனில் இது மருந்துகளின் பாதுகாப்பான பயன்பாட்டுக்குத் துணை புரியாது. மருந்து குறிப்பேடானது நோயாளிகள் மருந்து உட்கொள்வதற்கு உறுதுணை புரியும். அத்துடன் அது குறிப்பிட்ட சட்டத் தன்மையும் பெற்றுள்ளது. எனவே மருந்து உட்கொள்ளும் போது குறிப்பேடுகளை ஆதாரமாக கொள்ள வேண்டும். குறிப்பாக மருத்துவர் எழுதிக் கொடுத்த மருந்துகள் பற்றி மிகவும் விபரமான குறிப்புகள் உள்ளன. பெய்சிங் ராணுவ மருத்துவ மனையின் மருத்துவர் சோ சூ மின் அம்மையார் எமது செய்தியாளரிடம் கூறுகிறார்.

 மருந்து உட்கொள்ளும் போது மருந்து குறிப்பேட்டின் படி மருந்து உட்கொள்ளும் நல்ல பழக்கத்தை வளர்க்க வேண்டும. தற்போது ஒரு மருந்துக்கு பல பெயர்கள் உண்டு என்பதை அனைவரும் அறிவோம். நீங்கள் ஒன்று மட்டும் அறிந்து கொண்டால் போதாது. இந்த மருந்தில் என்னென்ன பொருட்கள் கலந்துள்ளன என்பதை அறியாமல் உட்கொண்டால் தவறாக உட்கொள்ள நேரிடும் என்றார் அவர். எடுத்துக்காட்டாக ஒருவர் பல் நோவால் ஒரு மணி நேரத்திற்குள் மருந்து குரிப்பேடுகளைப் படிக்காமல் 4-5 வகை வெப்வேறான பெயரிட்ட மருந்துகளை உட்கொண்டார். ஆனால் இந்த மருந்துகளின் முக்கியமான வீதப் பங்கு ஒரே வகையான வலி நீக்கும் மருந்து என்பதை அவர் அறிந்து கொள்ள வில்லை. இதன் விளைவாக அவர் தீவிர சிறு நீரக பலவீன நோயால் பீடிக்கப்பட்டார். மருந்துகளைச் சேமித்து வைத்திருப்பது பற்றிய அறிவை தவிர, நாம் எல்லோரும் மருந்துகளை உட்கொள்ளும் போது பல விஷயங்களை கவனிக்க வேண்டும். முதன் முதலாக மருந்துகளை உட்கொள்வதற்கு முன் சில விஷயங்களைக் கவனிக்க வேண்டும். சில மருந்துகளை எந்த நாள் வரை பயன்படுத்தலாம் என்ற குறிப்பில் குறிக்கப்பட்ட நாளுக்குள் இருந்த போதிலும் அவற்றின் சுவையும் நிறமும் மாறினால் அவற்றை உட்கொள்ள கூடாது. தவிரவும் மருந்து உட்கொள்ளும் போது மது குடிக்கவோ புகை பிடிக்கவோ கூடாது. இப்படி செய்தால் மருந்துகளின் பயனை எளிதில் வீனாக்கவோ மருந்துகளிலுள்ள நச்சு பொருட்களை உட்கொள்ளவோ கூடும். குறிப்பாக நோயாளிகள் தூக்க மாத்திரை உட்கொண்ட பின் மது குடிக்க கூடாது. மருந்துகளை  உட்கொள்ளும் போது சுடு நீருடன் உட்கொண்டால் நல்லது. பழச்சாறு தேநீர் அல்லது பாலில் உட்கொள்வது நல்லதல்ல. காரணம் தேநீரில் உள்ள தேநீர் காரம் பாலிலுள்ள புரதச்சத்து பழச்சாற்றிலுள்ள அமிலப் பொருட்கள் ஆகியவை மருந்துகளுடன் கலந்தால் மருந்துகளின் பயன் பாதிக்கப்படும்.