சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் 29வது ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கான ஒருங்கிணைப்பு குழுவின் 8வது கூட்டம் 19ம் நாள் பெய்ஜிங்கில் முடிவடைந்தது.
ஒருங்கிணைப்பு குழுவின் உறுப்பினர்கள், பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கான அமைப்புக் குழுவினருடன், சுற்றுச்சூழல், செய்தி ஊடக சேவை, ரசிகர்கள் முதலிய பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
பெய்ஜிங் மாநகரமும் அமைப்புக் குழுவும் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கான ஆயத்த பணிகளில் புதிய முன்னேற்றம் பெற்றதைக் கண்டு அவர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 500 நாட்களுக்கு பிறகு, பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டி துவங்கும். இன்னும் பல ஆயத்த பணிகள் உண்டு. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியும் பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கான அமைப்புக் குழுவும் ஒன்றை ஒன்று நம்பி, நெருக்கமாக ஒத்துழைத்து, உலகத்துக்கு ஒரு சிறந்த தரமுடைய ஒலிம்பிக் விளையாட்டு போட்டியை வழங்கும் என்று ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் Verbruggen தெரிவித்தார்.
|