பசுமையான, அழகான பெய்ஜிங் சோயாங் பூங்காவில், ஒரு தீவு இருக்கிறது. இத்தீவில், செயற்கை மணற்திடல் அமைக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் மணற்திடல் கைப்பந்து விளையாட்டுக்கானகளரியே, இதுவாகும்.
சோயாங் பூங்காவில் அமைந்துள்ள 2008ம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் மணற்திடல் கைப்பந்து விளையாட்டுக்களரி, ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கான தற்காலிக களரியாகும். இதில் போட்டிக்கான ஒரு முக்கிய களரியும், பயிற்சிகளுக்கான 8 களரிகளும் உண்டு. 12 ஆயிரம் மக்கள் இந்த முக்கிய விளையாட்டுக்களரியில் ஒரே நேரத்தில் போட்டியை கண்டுரசிக்க முடியும். சோயாங் பூங்காவிலான மணற்திடல் கைப்பந்து விளையாட்டுக்களரி, 2005ம் ஆண்டு டிசம்பர் திங்கள் அமைக்கப்பட துவங்கியது. தற்போது, விளையாட்டுக்களரியின் உருக்கு அமைப்பு கட்டிமுடிக்கப்பட்டுள்ளது. 17 ஆயிரம் டன்னுக்கு மேலான மணல், சீன கைய்னான் தீவ்விலிருந்து தொடர்ந்து கொண்டுவரப்படுகிறது. இவ்வாண்டு ஜூலை முதல் நாள் இத்திட்டப்பணி முழுமையாகக் கட்டிமுடிக்கப்படும்.
|