ஏழைக் குழந்தைகளும் பெய்சிங் ஒலிம்பிக்கை பார்க்க வாய்ப்
cri
2008ம் ஆண்டில் பெய்சிங் மாநகரில் ஒலிம்பிக் விளையாட்டு போட்டி நடைபெறும் போது, நாட்டின் வறிய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளும் நேரில் இந்த விளையாட்டு திருவிழாவை கண்டுகளிக்க வாய்ப்பு வழங்கப்படவுள்ளது. சீன இளைஞர் மேம்பாட்டு அறக்கட்டளை, சீன மத்திய தொலைக்காட்சி நிலையம் மற்றும் வான்டேஜ் என்ற தனியார் நிறுவனம் ஒன்றாக இணைந்து, நலிவுற்ற குழந்தைகளின் ஒலிம்பிக் கனவு நனவாதல் என்ற திட்டத்தின் மூலம் 10 குழந்தைகளை தேர்வு செய்யவுள்ளன. இந்த குழந்தைகள் வறுமையின் காரணாமாய் இடைநிலை பள்ளிக்கல்வியை முடிக்க இயலாத 1000 குழந்தைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுவார்கள் எனப்படுகிறது. இந்த வான்டேஜ் நிறுவனம் கான்சூ மற்றும் உள்மங்கோலியத் தன்னாட்சி பிரதேசத்தின் பள்ளி இடைநின்ற குழந்தைகளின் கல்வி தொடர 5 லட்சம் யுவானை வழங்கியுள்ளது.
|
|