• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-06-14 16:54:18    
மூங்கில் அருங்காட்சியகம்

cri

இந்த மூங்கில் இயற்கைக் காட்சி மண்டலத்தில், மூங்கில் அருங்காட்சியகம் ஒன்று இருக்கிறது. இதில் 58 அரிய மூங்கில் வகைகள் காணப்படலாம். 1986ம் ஆண்டில் கட்டியமைக்கப்பட்ட இந்த மூங்கில் அருங்காட்சியகம், சீனாவில் முதல் சிறப்பு மூங்கில் அருங்காட்சியகமாகும். அதன் முக்கிய கட்டிடங்களின் பரப்பளவு, 3800 சதுர மீட்டராகும். பல்வேறு வகை மூங்கில் மாதிரிகள், மூங்கில் ஆயுதங்கள், மூங்கில் இசைக் கருவிகள் முதலிய மூங்கில் கலைப்பொருட்கள், இதில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இவை எல்லாம், சிசுவான் மாநிலத்தின் தென் பகுதியிலுள்ள மூங்கில் கடலின் தரமிக்க மூங்கில்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டவை என்று லீன் வேய் அறிமுகப்படுத்தினார். அவர் கூறியதாவது:

 
இது, சீனாவில், மூங்கிலை முதன்மையாகக் கொண்ட முதலாவது சிறப்பு அருங்காட்சியகம் ஆகும். உலகளவில் மிக சிறிய மூங்கில் வகையான CUI மூங்கில், ஒட்பீட்டளவில் உயரமான NAN மூங்கில் முதலியவை இதில் இடம்பெறுகின்றன என்றார் அவர்.
இந்த அருங்காட்சியகத்தின் நுழைவாயிலிருந்து வெளியே சென்று, காட்சி மண்டலத்தின் பாதையில் நடந்து சென்றால், "கடலுக்குள்ளே கடல்"என்னும் மற்றொரு காட்சியிடத்துக்கு வந்தடையும். அதன் நுழைவாயில், சிசுவான் பிரதேசத்தின் பாரம்பரிய வளைவின் வடிவத்தை மாதிரியாக கொண்டு கட்டியமைக்கப்பட்டது. சிசுவான் மாநிலத்தின் தென் பகுதியிலுள்ள மூங்கில் இயற்கைக் காட்சி மண்டலத்தின் பள்ளத்தாக்கில் "கடலுக்குள்ளே கடல்" என்னும் காட்சி இடம், அமைந்துள்ளது. சுமார் 40 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவான இந்த ஏரி, மூங்கில் கடலிலுள்ள ஒரு சிறிய கடல் போன்றது. எனவே, இந்தப் பெயர் கொண்டு அழைக்கப்படுகிறது. பயணியர்கள், மூங்கில் கட்டுமரம் மூலம், ஏரியைச் சுற்றுவந்து காட்சிகளைக் கண்டு களிக்கலாம் என்று, வழிகாட்டி ஹு தூங்லின் கூறினார். அவர் மேலும் கூறியதாவது:

 
நான் இப்போது பெரிய மூங்கில் கடலில் இருக்கின்றேன். இந்த ஏரியை கடலாக, உள்ளூர் மக்கள் அழைக்கின்றனர். படகில் இந்த ஏரியைச் சுற்றிப் பார்த்தால், சுற்றி எங்கும் மூங்கில் நிறைந்து காணப்படும் என்றார் அவர்.
மூங்கில் கடல் மண்டலத்தில், பான்டா விருந்து சுவைக்க வேண்டும். பான்டா விருந்து என்பது, மூங்கில் விருந்து தான். அனைத்து உணவு வகைகளுக்கும் பயன்படுத்த மூலப்பொருட்கள், மூங்கிலுடன் தொடர்பு உடையவை. இதில் 100க்கு அதிகமான வகைகள் உள்ளன.

 
சாலையின் பக்கத்திலுள்ள ஒரு சிறிய கடையின் உரிமையாளர் சாங் லியாங் தியன், பயணிகளிடம், ஹுவான் பா என்னும் உள்ளூர் சிற்றுண்டியைப் பரிந்துரை செய்தார். இச்சிற்றுண்டி, மூங்கில் முளையின் இலையைப் பயன்படுத்தி, பசை போன்ற அரிசியை வைத்து சுருட்டி, நீராவியில் வேக வைத்து தயாரிக்கப்பட்டது என்று அவர் அறிமுகப்படுத்தினார்.


பொதுவாக, பயணியர்கள், இந்த மூங்கில் இயற்கைக் காட்சி மண்டலத்தின் ஹோட்டலில் சில நாட்கள் தங்கி, மூங்கில் கடலின் தனிச்சிறப்பை உணர்ந்து கொள்கின்றனர். அழகான மூங்கில் கடல் இயற்கைக் காட்சி மண்டலத்தில் ஆண்டின் சராசரி வானிலை, 15 டிகிரி செல்சியஸ் தான். வேறுபட்ட பருவகாலத்தில், வேறுபட்ட மணம் கமழும் மூங்கில் கடலைப் பார்க்கலாம்.