பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் தீபம் சுமப்பவர்களைத் தேர்ந்தெடுக்கும் துவக்க விழா ஜூன் திங்கள் 23ம் நாள் பெய்சிங்கில் நடைபெறும் என்று பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கான அமைப்புக் குழுவின் அதிகாரி ஒருவர் 18ம் நாள் பெய்சிங்கில் தெரிவித்தார்.
ஏப்ரல் திங்கள் 26ம் நாள் பெய்சிங் ஒலிம்பிக் தீபத் தொடரோட்ட நெறி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. மிக அதிகமான, தீபம் சுமப்பவர்கள், மிக நீளமான தொடரோட்ட காலம், மிக நீண்ட தூர தொடரோட்ட நெறி ஆகிய மூன்று சாதனைகளைப் பெய்சிங் ஒலிம்பிக் விளாயாட்டு போட்டியின் தீபத் தொடரோட்டத் திட்டம் உருவாக்கும். பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கான ஒலிம்பிக் தீபம் சுமப்பவர்களின் எண்ணிக்கை, 21 ஆயிரத்து 780 பேரை எட்டும்.
|