கடந்த நூற்றாண்டின் 60ம் ஆண்டுகளில் பெய்ஜிங்கின் சின்னமாக திகழ்ந்த புகழ்பெற்ற தொழிலாளர் விளையாட்டுத்திடலிலும் தொழிலாளர் விளையாட்டரங்கிலும், பல முறை பெருமளவிலான நடவடிக்கைகள் நடைபெற்றன. 50 ஆண்டுக் காலத்தை கடந்து, அவை பழையனைவாக மாறியுள்ளன. 2008ம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் கால்பந்து போட்டி மற்றும் குத்துச்சண்டை போட்டியை வரவேற்க, அவை மறுசீரமைக்கப்பட்டு வருகின்றன.
தொழிலாளர் விளையாட்டுத்திடல், 1959ம் ஆண்டு ஆக்ஸ்த் 31ம் நாள் கட்டி முடிக்கப்பட்டது. இதற்கான மறுசீரமைப்பு திட்டப்பணி 2006ம் ஆண்டு ஏப்ரல் 18ம் நாள் துவங்கியது. இத்திட்டப்பணி சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி, சர்வதேச கால் பந்து சம்மேளனம் பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கான அமைப்புக் குழு ஆகியவற்றின் கோரிக்கைக்கு இணங்க, விளையாட்டுத்திடலின் அமைப்பை வலுப்படுத்தி, புல் தரையை திருத்தி அமைத்தது. 2008ம் ஆண்டு தொழிலாளர் விளையாட்டுத்திடலின் புல் தரை, பிரிட்டனின் Wimbley விளையாட்டுத்திடலின் புல் தரையை போன்று அழகாக அமையும் என்று கட்டிட வட்டாரம் கூறியது.
தொழிலாளர் விளையாட்டரங்கு 1961ம் ஆண்டு கட்டியமைக்கப்பட்டது. இவ்விளையாட்டரங்கின் சன்னல்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. தவிர, இவ்விளையாட்டரங்கில், 240 செய்தியாளர் இருக்கைகள், 30க்கு மேலான முக்கிய பிரமுகர் இருக்கைகள் மற்றும் 40 சதுரமீட்டர் பரப்பளவிலான ஓய்வு அறை ஆகியவை அதிகரிக்கப்பட்டுள்ளன.
|