• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-07-25 15:14:06    
Wang Rui Guangகின் மூன்று வகை வாழ்க்கை அனுபவங்கள்

cri

35 வயதான Wang Rui Guang, பெய்சிங்கில் பிறந்தார். 1995ஆம் ஆண்டு, பெய்ஜிங் அன்னிய மொழி பல்கலைக்கழகத்தின் இத்தாலிய மொழி துறையில் அவர் பட்டம் பெற்றார். சிறந்த மதிப்பெண்ணுடன், வெளியுறவு அமைச்சின் ஐரோப்பியப் பகுதியில் வேலைக்கு நியமிக்கப்பட்டார். அங்கு ஓராண்டு பணி புரிந்தப் பிறகு, இத்தாலியில் உள்ள சீனத் தூதரகத்துக்கு அவர் அனுப்பப்பட்டார்.

இரண்டு ஆண்டுகளாக தூதாண்மை அதிகாரியாக வேலை செய்தது Wang Rui Guangகிற்கு பெரும் நன்மை அளித்தது. இதற்கிடையில், புதிய வாழ்க்கை அனுபவத்தை அவர் எதிர்பார்த்தார். நன்றாக யோசித்தப் பின்னர், தூதாண்மை அதிகாரி பதவியிலிருந்து விலகி, வணிகத் துறைக்குள் நுழைய அவர் தீர்மானித்தார். இது பற்றி அவர் கூறியதாவது:

"வெளியுறவு அமைச்சகத்தில், பல அனுபவங்களைப் பெற்றேன். பிந்தியப் பணிகளுக்கு இந்த அனுபவங்கள் துணை புரிந்தன. இத்தகைய தெரிவை செய்ய நான் எப்போதும் வருந்துவதில்லை" என்றார் அவர்.

தூதாண்மை அதிகாரி பதவியிலிருந்து விலகிய Wang Rui Guang, சில காலம் ஓய்வு பெற விரும்பியிருந்தார். அப்போது, இத்தாலியின் இசை நாடகக் குழு பெய்சிங்கில் உள்ள அரண்மனை அருங்காட்சியகத்தில் Turandot இசை நாடகத்தை அரங்கேற்றியது. நண்பர் ஒருவரின் பரிந்துரையுடன், இந்நாடகத்தின் மொழி பெயர்ப்புப் பணியில் Wang Rui Guang ஈடுபட்டார். அவரின் மொழி பெயர்ப்புத் தரத்தை, இசை நாடகக் குழுவின் பணியாளர்கள் ஏற்று கொண்டனர். மேலும், ஒரு பண்பாட்டுக் கூட்டு நிறுவனத்தின் பொறுப்பாளரின் கவனத்தை அவரது திறமை ஈர்த்தது. இவ்வாறு, இக்கூட்டு நிறுவனத்தில் சேர அவர் அழைக்கப்பட்டார்.

இக்கூட்டு நிறுவனத்தில் மூன்று ஆண்டுகள் பணி புரிந்த அவர், தலைசிறந்த திறனைக் கொண்டு, முதுகெலும்பாகினார். அவரின் சகமாணவரும், சக பணியாளருமான Tian Xing அவரை இவ்வாறு மதிப்பிட்டுள்ளார். அவர் கூறியதாவது:

"அவர் ஆர்வத்தைத் தூண்டுபவர். என்னுடைய கருத்தில், அவர் இலக்கியத்தையும் கலையையும் நேசிக்கின்றார். அவர் மிகத் திறமையானவர். அவருக்கு எண்ணங்கள் அதிகம். துணிச்சலும் அவருக்கு உண்டு. ஒவ்வொரு பணியையும் அவர் உணர்வுபூர்வமாக நிறைவேற்றுகின்றார்" என்றார், அவர்.

மூன்று ஆண்டுகள் உருண்டோடி விட்டன. பின்னர், தமது கூட்டு நிறுவனத்தை Wang Rui Guang நிறுவி, சீன-இத்தாலிய பண்பாட்டுப் பரிமாற்றத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றார். 2006ஆம் ஆண்டு ஜனவரி திங்கள், சீன-இத்தாலிய பண்பாட்டு ஆண்டு என்ற நடவடிக்கையின் துவக்க விழா பெய்சிங்கில் நடைபெற்றது. இத்தாலிய அரசின் ஏற்பாட்டில் நடைபெற்ற 20க்கு அதிகமான பண்பாட்டுப் பொருட்காட்சிகள், சுமார் நூறு அரங்கேற்றங்கள் இத்தாலிய விளையாட்டு ஆடல் குழுவின் சீனாவிலான வீதிக்காட்சிகள், கட்டிடத் தொழில் பற்றிய சீன-இத்தாலியக் கருத்தரங்கு உள்ளிட்ட பல திட்டப்பணிகளில் Wang Rui Guangகின் கூட்டு நிறுவனம் பங்கெடுத்தது. இத்தாலி-சீன ஒத்துழைப்பு ஆக்கப்பூர்வமானது. பயன்மிக்கது. Wang Rui Guangஐப் போன்ற "பண்பாட்டு வணிகர்கள்" இதில் பெரும் பங்காற்றியுள்ளனர்.

சீனாவில், இத்தாலி ஆண்டு என்ற நடவடிக்கை நடைபெற்றதுடன், இத்தாலி மீது சீனர்கள் மென்மேலும் ஆர்வம் காட்டுகின்றனர். மேலும் கூடுதலான சீன மாணவர்கள், இத்தாலியின் பல்கலைக்கழகங்களில் சேர பதிவு செய்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில், சீன மாணவர்கள் இத்தாலியில் கல்வி பயில்வதற்கு மேலும் வசதிகளை வழங்கும் பொருட்டு, சீன மாணவர்கள் தொடர்பான விசா கொள்கையை இத்தாலிய அரசு திருத்தியது. இந்நிலைமையைக் கண்டு, Wang Rui Guangகின் மனதில் மற்றொரு கனவு தோன்றியது.

Wang Rui Guangகின் குடும்பத்தில் 20க்கு அதிகமானோர் ஆசிரியர்களாக இருந்தனர் அல்லது இருக்கின்றனர். Wang Rui Guangகின் முயற்சியுடன், அவரின் கூட்டு நிறுவனத்தின் அலுவல் சிறப்படைந்தது. இருந்த போதிலும், வணிகத் தொழிலில் ஈடுபடுவதை, தமது வாழ்வில் பாடுபடும் குறிக்கோளாக அவர் கொள்ளவில்லை. சீன, இத்தாலிய கல்வி அமைச்சகங்கள் கையொப்பமிட்ட உடன்படிக்கையின்படி, இரு நாட்டு உயர் கல்வி நிலையங்களுக்கிடை ஒத்துழைப்பு வலுப்படுத்தப்படும் என்று அவர் கேள்விப்பட்டார்.

ஷாங்காய் மாநகரில் உள்ள Tong Ji பல்கலைக்கழகம், ஒத்துழைப்பில் பங்கெடுக்கும் முதலாவது தொகுதி சீனப் பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும் என்றும் அவர் கேள்விப்பட்டார். ஒரு வாய்ப்பைப் பயன்படுத்தி, Tong Ji பல்கலைக்கழகத்தில் புதிதாக நிறுவப்பட்ட சீன-இத்தாலிய கல்லூரிக்கு சென்ற அவர், இத்தாலிய மொழி ஆசிரியர்கள் இக்கல்லூரியில் தேவை என்று அறிந்து கொண்டார். கல்லூரித் தலைவருடன் ஆழமாகக் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்ட பின், பணியை மீண்டும் மாற்ற Wang Rui Guang தீர்மானித்தார். அவர் கூறியதாவது: 

"தொழில் நடத்துவதும், ஆசிரியராகப் பணி புரிவதும் பெரிதும் வேறுபட்டன. ஆனால், இவ்விரு பணிகளுக்கிடையில் தொடர்பு உண்டு. பண்பாட்டு நடவடிக்கைகளில் நான் கற்றுக்கொண்டு, சேமித்த அனுபவங்களை, Tong Ji பல்கலைக்கழகத்தில் பயன்படுத்தலாம்" என்றார், அவர்.

Tong Ji பல்கலைக்கழகத்தில் சேர்ந்து பாடம் கற்பிக்கத் தொடங்கியது முதல் இது வரை, இத்தாலியின் பல்கலைக்கழகங்களுடன் ஒத்துழைப்பு மேற்கொள்வது பற்றிய கலந்தாய்வில் Wang Rui Guang ஈடுபட்டுள்ளார். மேலும், 30க்கு அதிகமான சீன மாணவர்களுக்கு இத்தாலிய பேச்சு மொழி பாடத்தை அவர் கற்பித்தார். மாணவர்களின் பார்வையில், பேச்சு மொழியைக் கற்பிப்பதில் ஆசிரியர் Wang தேர்ச்சி பெற்றவர். ஓராண்டாக இத்தாலிய மொழியை பயின்றுள்ள மாணவர் Li Xiao Lin கூறியதாவது:

"ஆசிரியர் Wang பாடம் கற்பிப்பது, பெரும் ஆர்வத்தை ஏற்படுத்துகிறது. இது, அவரின் அனுபவங்களுடன் தொடர்பானதாக இருக்கக்கூடும்" என்றார், அவர்.
Wang Rui Guang பெய்சிங்கிலிருந்து, ஷாங்காய்க்குச் சென்று, பல்கலைக்கழக ஆசிரியராக பணி புரிகின்றார். குடும்பத்தினர்கள் மற்றும் நண்பர்களை விட்டுச் சென்ற போதிலும், அவர் மகிழ்ச்சியுடன் இருக்கின்றார். அவர் கூறியதாவது:

"இவ்வாண்டு, Tong Ji பல்கலைக்கழகம் நிறுவப்பட்ட 100வது ஆண்டு நிறைவாகும். நிறைவு விழா நாட்களில், பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இத்தாலியின் உயர் கல்வி நிலையங்கள், அமைப்புகள், இத்தாலிய அரசு ஆகியவற்றுடனான ஒத்துழைப்பு இவற்றில் அடங்கும். இத்தாலிய சுற்றுச்சூழல் தேசிய நில மற்றும் கடல் அமைச்சகத்துடனான திட்டப்பணி, இவற்றில் முக்கியமானது. இத்திட்டப்பணியில் நான் பங்கெடுப்பேன். தவிர, 2010ஆம் ஆண்டு ஷாங்காய் மாநகரில் நடைபெறும் உலகப் பொருட்காட்சி தொடர்பான பொது போக்குவரத்து நிர்வாகத் திட்டப்பணியும் இவற்றில் அடங்கும். இந்த ஒத்துழைப்பின் அடிப்படையில் பயிற்சித் திட்டப்பணிகள் சில வழங்கப்படும். இவற்றில் பங்கெடுப்பேன்" என்றார், அவர்.