• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-07-27 15:10:19    
சிறப்பான ஓவியர் சாய் சௌ சியூ

cri
நாள்தோறும் காலையில் 7 மணி முதல் நான் ஓவியம் வரைவதில் ஈடுபட துவங்கினேன். நண்பகலில், கிராம விவசாயிகளின் வீட்டில் கொஞ்சம் உணவு சாப்பிட்ட பின் தொடர்ந்து வரைவதில் ஈடுபட்டு. இரவு வீட்டுக்கு திரும்பினேன். களைப்பாக இருந்தாலும் இது, மதிப்புடையது என்று நான் கருதினேன் என்றார் அவர்.
கிராம பெண்மணி வான் அம்மையார் கூறியதாவது


சௌ சியூ இன்னல்களை பொறுப்படுத்தாமல் நன்றாக ஓவியம் தீட்டினார் என்று பாராட்டினார்.
இதனால், தத்தமது வீட்டு வெளியேச் சுவர்களில் ஓவியங்களை கிராம விவசாயிகள், அடுத்தடுத்து சாய் சௌ சியூக்கு அழைப்பை விடுத்துள்ளனர். இதற்காக, சாய் சௌ சியூவின் சுவர் ஓவியங்கள், மிக வளர்ச்சி காலத்தில் நுழைந்துள்ளன. தமது ஓவியங்கள், மலை, ஆறு, பூக்கள், பறவைகள், சித்திரப்படங்கள், எழுத்துகள் முதலிய பல வகைகளுடன் சேர்ந்து, நாகரிகம் அமைதி இணக்கம், சமூக லட்சியம் முதலிய உள்ளடக்கங்களையும் வெளிப்படுத்தின.
ஆனால், ஒரே நபர் என்பதால் ஆற்றல் குறைவு. கிராமஓவியங்கள்,கிராமவாசிகளில் கூட்டு உழைப்பு சாதனையாகும். சாய் சௌ சியூ மிக களைப்பான நிலையில் இருந்த போது, கிராம துவக்க பள்ளியின் ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற அதிகாரிகள், அவரது தம்பி என அனைவரும், அவருடன் சேர்ந்து ஓவியம் வரைவதில் ஈடுபட்டனர். கூட்டு முயற்சியில் 4 திங்கள் காலத்தில் சுமார் 300 ஓவியங்கள் வரையப்பட்டன. ஓவியங்கள் கிராமத்தை மிகவும் அழகுபடுத்தின சீரான தூய்மையான அழகான சுவர் ஓவியங்கள், கிராம விவசாயிகளுக்கு கல்வி சட்டம், கொள்கை மற்றும், நாகரீகம் வழங்கிய நல்ல பாட நூலாக மாறியுள்ளன. கிராமவாசி சௌ தா பௌ கூறியதாவது
முன்பெல்லாம் நகர வாசிகளின் வாழ்்ககையை கண்டு நாங்கள் பொறாமைபபட்டோம். இப்போது அப்படி இல்லை. நாகரீக இப்போது இல்லை. நேகரிக கிராமத்தை உருவாக்குவதன் மூலம், ஓவியங்களின் துணையில் தலைமையில், நமது அறிவுஉயர்ந்துள்ளது. நாகரீகமற்ற நடவடிக்கையில் ஈடுபடுவோரை காணாமல் போகிறார் என்றார் அவர்.
பல காலத்துக்கு முன் இந்த கிராமத்தில் வாழ்ந்த முதியோர் சேங் லீ, நீண்டகாலமாக விலகியிருந்த தமது ரோ ஜூ சாங் கிராமத்துக்கு சிறப்பாக திரும்பி பார்த்தார். அவர் கூறியதாவது


ரோ ஜூ சாங்வில் புதிய கிராம கட்டுமான பணி நன்றாக மேற்கொள்ளப்படுகிறது என்று நான் கேள்விப்பட்டேன். 40க்கு அதிகமான ஆண்டுகளாக நான் இங்கே திரும்ப வில்லை. மாற்றம் மிக அதிகமாக நிகழந்துள்ளது என்பதை நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை என்றார் அவர்.
இப்போது, சாய் சௌ சியூ, எழுத்து மற்றும் ஓவிய சங்கத்தை நிறுவுவதன் மூலம் உள்ளூர் மற்றும் அண்டை கிராமங்களில் எழுத்து மற்றும் ஓவிய கலையை விரும்புகின்ற கிராம குழந்தைகளுக்கு இலவசமாக பயிற்சி அளிக்க விரும்புகிறார்