14வது ஆசிய கோப்பை கால்பந்து போட்டி, பெய்சிங் நேரப்படி ஜூலை திங்கள் 29ம் நாள் இந்தோனேசியாவின் தலைநகரான ஜகார்த்தாவில் நிறைவடைந்தது. இறுதி ஆட்டத்தில் ஈராக் அணியும் சௌதி அரேபிய அணியும் மோதின. பிற்பாதியில் ஈராக் அணி ஒரு கோலை அடித்து 1-0 என்ற கோல் கணக்கில் சௌதி அரேபிய அணியைத் தோற்கடித்தது. ஆசிய கோப்பை கால்பந்து போட்டியின் சாம்பியன் பட்டத்தைப் ஈராக் பெறுவது இதுவே முதன் முறையாகும். அத்துடன், இது, ஆசிய கோப்பை கால்பந்து போட்டி வரலாற்றில், சாம்பியன் பட்டத்தைப் பெற்ற 7வது அணியாகும். மூன்றாவது இடத்துக்கான ஆட்டத்தில், தென் கொரிய அணி பெனால் டிக் உதை முறை மூலம் ஜப்பானிய அணியை 6-5 என்ற கோல் கணக்கில் வென்றது.
இறுதியில், ஈராக், சௌதி அரேபியா, தென் கொரியா முறையே முதல் 3 இடங்களைப் பெற்றன.
|