• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-08-14 08:51:20    
கிராமப்புறத்தில் ஒரு மருத்துவ

cri

Dong tang ஊருக்கும் இதற்கு அருகிலுள்ள ஊர்களுக்கும் இடையிலான சாலைகள் வெலும் மண் சாலைகளாகும். கடந்த 5 ஆண்டுகளாக, ma yup eng இத்தகைய சாலைகளில் பயணித்து கிராமவாசிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளித்து மருந்துகளை அளிக்கின்றார். அவருக்கு ஓய்வு நேரம் குறைவு.

 
கிராம மருத்துவர் இல்லை என்றால், dong tang மக்கள் மாவட்ட அளிவிலான மருத்துவமனை செல்ல வேண்டியுள்ளது. ஊரில், சாதாரண காய்ச்சல் பிடித்தால் சிகிச்சை அளிப்பதற்கு சில யுவான் மட்டும் போதும். ஆனால், மாவட்ட நிலையில் சிகிச்சை பெறுவதற்கு குறைந்தது 100 யுவான் முதல் 200 யுவான் தேவைப்படுகின்றது. தவிர, வழிச்செலவு ஹோட்டல் ஆகியவற்றில் கட்டணமும் தேவை. உள்ளூர் மக்களைப் பொறுத்த வரை, இத்தகைய கட்டணம் அதிகமானது.
கிராம மருத்துவர் என்ற முறையில், ma yup engக்கு திங்களுக்கு 300 யுவான் மட்டும் வருமானமாகக் கிடைக்கலாம். குடும்பத்தின் செலவுக்கு இது போதாது. ஆகையால், கிராமவாசிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதை தவிர, அவர் வயலில் உழைக்க வேண்டும். அவருடைய மனைவி கூறியதாவது,


நகரங்களுக்குச் சென்றால், வளர்ச்சி வாய்ப்பு அதிகம். கிராமத்தில் தங்குவதை விட நல்லது. ஆனால், அவரும் மாமனாரும் எனக்கு அறிவுரைகள் கூறியுள்ளனர். இங்கே மக்கள் அவரை வெகுவாகப் பாராட்டுகின்றனர். அவர்களிடமிருந்து பிரிந்து செல்ல அவர் விரும்பவில்லை. படிப்படியாக, அவரை புரிந்து கொண்டேன். இயன்ற அளவில் அவருக்கு உதவியளிக்கின்றேன் என்றார் அவர்.
Zhang xiu fang என்பவர் தீராத மார்புச்சளி நோயாளி ஆவார். மருத்துவர் ma yup eng பற்றி குறிப்பிடும் போது, அவர் நன்றியையும் நம்பிக்கையையும் தெரிவித்தார்.
எனது நோய் அவ்வப்போது தீவிரமாகக் கூடும். இரவு தூங்கும் நேரத்திலும் தொலைபேசி மூலம் அவரை அழைத்தால், உடனடியாக அவர் வரலாம். மாவட்டத்துக்குச் சென்றால், வழியில் 10 யுவானுக்கு மேல் செலவிட வேண்டும். மருத்துவர் மா நல்ல வேலை செய்கிறார் என்றார் Zhang xiu fang.

 
கிராமவாசிகளின் நல்லெண்ணமும், அன்பும் ma yu pengஐ கவர்ந்துள்ளன. இங்கிருந்து பிரிந்து செல்ல அவர் விரும்பவில்லை.