2008 பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நடைபெறும் முன், பெய்ஜிங்கில் 90 விழுக்காட்டு பேருந்துகளின் புகை மாசு வெளியேற்றம், ஐரோப்பாவின் 3வது வறையரையை எட்டும் என்று, பெய்ஜிங் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பணியகத்தின் துணைத் தலைவர் DU SHAO ZHONG இன்று பெய்ஜிங்கில் தெரிவித்தார்.
தற்போது, பெய்ஜிங்கில், போக்குவரத்திற்குப் பயன்படுத்தப்படும் பேருந்துகளின் எண்ணிக்கை, 19 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இதில், 10 ஆயிரம் பேருந்துகளின் புகை மாசு வெளியேற்றம், ஐரோப்பாவின் 3வது வறையரையை எட்டியுள்ளது. அத்துடன், பெய்ஜிங்கில், எரிவாயுயை பயன்படுத்தும் பேருந்துகளின் எண்ணிக்கை, 4 ஆயிரத்தை எட்டியுள்ளது. உலகளவில் இத்தகைய பேருந்துகளின் எண்ணிக்கை மிகவும் அதிகமான நகரமாக, பெய்ஜிங் திகழ்கின்றது என்று, அவர் கூறினார்.
|