வாகனப் போக்குவரத்துக் குறைப்பினால், காற்றுத் தரம் மேம்படுத்தப்படும் பரிசோதனை தகவலைத் திரட்டும் பொருட்டு, ஆகஸ்டு திங்களின் நடுப்பகுதியில், பெய்ஜிங் மாநகரத்தில், வாகனப் போக்குவரத்துக்கான கட்டுப்பாட்டுக் கொள்கை நடைமுறைப்படுத்தப்படும். பெய்ஜிங் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பணியகத்தின் துணைத் தலைவர் DU SHAO ZHONG இன்று இச்செய்தியை உறுதிபடுத்தியுள்ளார்.
தற்போது, பெய்ஜிங் நகரப்பிரதேசத்தில், காற்றுத் தரம் தெளிவாக மேம்பட்டுள்ளது. ஆனால், காற்று மாசுபாட்டைத் தடுக்கும் கடமை மேலும் கடினமானது. குறிப்பாக, வாகனங்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரிப்பதுடன், புகை மாசு வெளியேற்றம், காற்றுச் சூழலுக்கான முக்கிய மாசு ஊற்று மூலங்களில் ஒன்றாக மாறியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
|