1925ம் ஆண்டு மார்ச் 12ம் நாள், மாபெரும் புரட்சி முன்னோடியான திரு சன் யட் சியன், பெய்ஜிங்கில் நோய்வாய்பட்டு காலமானார். திரு சுன் யட் சியன், இளம் காலத்திலிருந்தே, சிங் வம்சத்தின் பிரபுத்துவ ஆட்சியைத் தூக்கியெறிவதில், அரும் பாடுபட்டு வந்தார். அவர், சீன லீக்கை உருவாக்கி, மூன்று ஜனநாயகத்துவத் தத்துவத்தை முன்மொழிந்தார். 1911 புரட்சிக்குப் பின், அவர் சீனக் குடியரசின் தற்காலிக அரசுத் தலைவராக பதவி ஏற்றார். யூவான் சு காய் அரசராகக் கொள்வதற்கு எதிரான, சட்ட பாதுகாப்பு இயக்கத்தைத் துவக்கினார். ரஷியாவின் அக்டோபர் புரட்சியின் செல்வாக்கின் கீழ் அவர் கோமிங்தான் க்டசியை மறு சீரமைப்பு செய்வதென உறுதிபூண்டார்.
ரஷியாவுடன் கூட்டணி சீனக் கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டமி விவசாயிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் உதவி செய்வது என்ற கொள்கையை நடைமுறைப்படுத்தினார். அவர், தமது மரண சாதனத்தில் பரந்துபட்ட பொது மக்களைத் தட்டியெழுப்பி, எங்கள் தேசத்தை சமமான முறையில் கையாள செய்யும் வகையில், உலகுடன் கூட்டுச் சேர்ந்து, கூட்டாக போராடுவோமாக!என்று, கருத்து தெரிவித்தார்.
அவர் விட்டுச்சென்ற படைப்புகள், சுன் யட் சியன் படைப்புகள், தலைமை அமைச்சரின் முழுப் படைப்புகள் உள்ளிட்ட பல படைப்புகளாக இயற்றப்பட்டுள்ளன.
|