• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-08-23 19:44:00    
உள்மங்கோலியாவிலுள்ள பாலைவன இயற்கைக்காட்சி

cri

பாதான் ஜீலின் பாலைவனம், உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசத்து அலசன் வலது மாவட்டத்தின் வடபகுதியில் அமைந்துள்ளது. அதன் மொத்த பரப்பளவு, 47 ஆயிரம் சதுர கிலோமீட்டராகும். உலகின் 4வது பெரிய பாலைவனமாகவும், சீனாவின் மூன்றாவது பெரிய பாலைவனமாகவும் இது விளங்குகிறது. பாதான் ஜீலினில், எமது செய்தியாளர், மில் என்னும் இளம் பெண் பயணியைச் சந்தித்து, பேசினார். அவர், பாலைவனங்களில் பல முறை நாடாய்வு மேற்கொண்டார். ஆனால், பாதான் ஜீலின் செல்வது, இதுவே முதல் முறை. இங்குள்ள காட்சி பற்றி குறிப்பிடுகையில், அவர் தனது பாராட்டை வெளிப்படுத்துகிறார்.

பாலைவன கருமையாகும் போது, தரை மட்டத்தின் மேல் வானவில்லைப் போன்ற வண்ணங்கள், காணப்படலாம். மிக மிக அழகானது. நான் அதை நிழற்படம் எடுத்தேன் என்றார் அவர்.

பாதான் ஜீலின், மணல் குன்றுகள் தனிச்சிறப்பியல்புடைய இயற்கைக் காட்சியாகும். கடந்த ஆயிரக்கணக்கான ஆண்டுகளில், பாலைவனத்தில் வலுவான காற்று வீசியதால், மணல் இடம்பெயர்ந்ததால், மேலும் உயரமான மணல் குவியல்கள் குன்றுகளாக உருவாக்கப்பட்டன. பாலைவனத்தின் மையப்பகுதியில், மணல் குன்றுகள், கடல் அலைகளைப் போன்றவை. கடல் மட்டத்திலிருந்து 500 மீட்டர் உயரமுள்ள, பிலூது என்னும் மணல் குன்று, சீனாவிலும் உலகளவிலும் மிகவும் உயரமான மணல் குன்றுயாகும். பாலைவன இமய மலை சிகரம் என்று, இது அழைக்கப்பட்டது. திரு சேனான், நாடாய்வு மன்றத்தின் தலைவராவர். அவர் ஒருக்குழுவுக்குத் தலைமைத் தாங்கி, இம்மணல் குன்றின் சிகரத்தில் ஏறினார். அவர் கூறியதாவது:

பாலைவன இமய மலை சிகரம் என அழைக்கப்பட்ட, பிலூது மலை, உலகில் பாலைவனத்தின் உச்சியாகும். இந்த பிலூது சிகரத்தின் உச்சியில், ஏறி அடைந்தது என்பது, உலகின் மற்ற இமய மலை சிகரத்தில் ஏறுவதற்குச் சமம் என்றார் அவர்.

பாலைவன ஒலி என்பது, பாதான் ஜீலினின் மற்றொரு தனிச்சிறப்பியல்பாகும். இது, காற்றினால் மணல் நகரும் போது ஏற்படும் ஒலியாகும். காற்றின் ஈர்ப்பதம், வெப்பம், காற்று வீசும் வேக மாற்றம் மற்றும் வேறுபட்ட சூழ்நிலையினால், பாலைவன ஒலி அடிக்கடி மாறுகிறது. பாதான் ஜீலின் பாலைவனத்தில், நாடும் மணல் குன்றுகள், மொத்த பாலைவன பரப்பளவில் சுமார் 83 விழுக்காடு வகிக்கின்றன. மணல் குன்றுகள் பல, ஒலியை எழுப்புகின்றன. 200 மீட்டர் உய் மணல் குன்றி ஏற்பட்ட ஒலியை, சில கிலோமீட்டர் தொலைவில் கேட்க முடியும். பாலை ஒலிகளில் சில இனிமையானவை, சில மயமுறுத்தக்கூடியவை.

பாதான் ஜீலின் பாலைவனத்தில், சில மணல் குன்றுகள், தனியான ஒரு கோயிலைச் சுற்றி அமைந்துள்ளன இக்கோயில், பாதான் ஜீலின் பாலைவனத்தில் உள்ள, ஒரேயொரு கோயில் ஆகும். பாதான் ஜீலின் கோயில் மிகவும் சிறியது இருந்த போதிலும், அதன் கட்டிடங்கள் மற்றும் தொல் பொருட்கள், சில பெரிய கோயில்களை விட, மதிப்புடையவை. பாதான் ஜீலின் கோயில், 1868ம் ஆண்டில் கட்டியமைக்கப்பட்டது. பாலைவனத்தில் அமைந்த வண்ணம், மிக குறைவான மணித நடமாட்டம் உள்ளதால், இக்கோயில், அழிவுக்கு உட்படுத்தப்படவில்லை.