பெய்சிங் மாநகரின் பிங்கு மாவட்டம் சீனாவில் பீச் பழங்கள் அதிகம் விளையும் பகுதியாகும். 2008 ஒலிம்பிக் போட்டியின்போது இப்பகுதியிலிருந்து 40 வகை பழங்கள் விநியோகிக்கப்படும் என்று அறியப்படுகிறது. இந்த 40 வகை பழங்களும் பசுமையான பழங்களாக, அதாவது சுற்றுச்சூழலுக்கு தீங்கேற்படுத்தாத வகையில் உற்பத்தி செய்யப்பட்ட பழங்களாக இருக்கும். இந்த பிங்கு மாவட்டத்தைச் சேர்ந்த 10 ஆயிரம் பீச் விவசாயிகள், 2008 பெய்சிங் ஒலிம்பிக் போட்டிக்கான பழங்களுக்கென, தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லிகளையோ, உரங்களையோ பயன்படுத்தப்போவதில்லை என்று வாக்குறுதியளித்துள்ளனர். ஆண்டுதோறும் 89 ஆயிரன் டன் மாசில்லா, பசுமையான பழ வகைகள் இந்த விங்கு பகுதியில் விளைகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
|