சர்வதேச உழைப்பாளர் அமைப்பின் கோரிக்கை
cri
பன்னாட்டு உழைப்பு ஆற்றலின் நிலைமை பற்றிய கள ஆய்வு அறிக்கையை, சர்வதேச உழைப்பாளர் அமைப்பு நேற்று ஜெனீவாவில் வெளியிட்டுள்ளது. உழைப்பு ஆற்றலின் நிலைமையை உயர்த்த வேண்டுமென இவ்வறிக்கை கோருகிறது. வளரும் நாடுகளை விட, வளர்ச்சியுற்ற நாடுகளின் இந்நிலைமை மிக சிறப்பாக உள்ளது. வளர்ச்சியடைந்த நாடுகளின் தொழில் நிறுவனங்களிலான முதலீடு, தொழிலாளிகளுக்கான பயிற்சி, தொழில் நுட்பப் புத்தாக்கம் முதலிய நடவடிக்கைகள், இதற்கு முக்கிய காரணங்களாகும் என்று இவ்வறிக்கை தெரிவித்தது. கிழக்காசிய பிரதேசத்தின் உழைப்பு ஆற்றல், மிக விரைவாக உயர்ந்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் இது ஒரு மடங்கு அதிகரித்துள்ளது என்றும், இவ்வறிக்கை குறிப்பிட்டுள்ளது.
|
|