அண்மையில், பெய்ஜிங் மாநகரில், முதல் தொகுதியான, ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் நுழைவுச் சீட்டுக்கான உறுதியளிப்பு கடிதங்கள், அஞ்சல் மூலம் அனுப்பத் துவங்கப்பட்டுள்ளன.
பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கான ஏற்பாட்டுக்குழு, முதல் கட்டத்தில் நுழைவுச் சீட்டுகளை வாங்க முன்பதிவு செய்த அனைத்து மக்களுக்கும் இவ்வுறுதி கடிதத்தை அனுப்பியுள்ளது.
பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் நுழைவுச் சீட்டுக்கான 2வது கட்ட விற்பனைப் பணி, அக்டோபர் திங்களில் துவங்கும். பொது மக்கள், முன்பதிவு செய்யலாம். நுழைவுச் சீட்டுகள், மக்களின் பதிவு செய்யும் ஒழுங்கின் படி, விற்பனை செய்யப்படும். 2வது கட்டத்தில், சுமார் 20 லட்சம் நுழைவுச் சீட்டுகள் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
|