பெய்ஜிங் ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி
cri
இன்று செப்டம்பர் 6ம் நாள் 2008ம் ஆண்டின் பாராலிம்பிக் எனப்படும் பெய்ஜிங் ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் துவக்க விழா நடைபெற சரியாக இன்னும் ஒரு ஆண்டு உள்ளது. பெய்ஜிங் பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டி பற்றிய ஆயத்தப் பணிகள் சுமூகமாக நடைபெற்று வருகிறது என்று பெய்ஜிங் ஒலிம்பிக் ஒருங்கிணைப்புக் குழுவின் துணைச் செயல் தலைவரும் ஊனமுற்றோர் ஒன்றியத்தின் தலைவருமான TANG XIAOQUAN அம்மையார் தெரிவித்தார். பெய்ஜிங் பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டி, பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் அரங்குகளை முற்றிலுமாகப் பயன்படுத்தும். இவற்றின் கட்டுமானத்தில் பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் சிறப்புக் கோரிக்கைகள் முழுமையாகக் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது என்று tang xiaoquan அம்மையார் எடுத்துக்கூறினார். பெய்ஜிங்கில் செய்தியாளர் நடைபெற்ற கூட்டத்தில், அவர் இதை கூறினார். பெய்ஜிங் பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்குச் சுமார், சுமார் 30 ஆயிரம் தொண்டர்கள் தேவைப்படுகின்றனர். இதுவரை, தொண்டர் சேவைக்காக விண்ணபித்தவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
|
|