சூடான், சாட், லிபியா ஆகிய நாடுகளில் பயணம் மேற்கொண்டது என்பது, சூடான் டார்பூர் பிரச்சினையை வெகு விரைவில் தீர்ப்பதற்கான செயலாக்க முக்கியத்துவம் கொண்டுள்ளது என்று ஐ.நா. பொதுச் செயலாளர் பன் கி மூன் நேற்று தெரிவித்தார்.
இத்திங்கள் 21ம் நாள் நியூயார்கில் ஐ.நா.வும் ஆப்பிரிக்க நாடுகள் ஒன்றியமும் கூட்டாக நடத்தும் டார்பூர் பிரச்சினைக்கான சர்வதேசக் கூட்டம், இப்பிரச்சினையை தீர்ப்பதற்கான இறுதி கட்டமாக அமைய வேண்டும் எனறு இப்பிரதேசத்தின் அனைத்து தலைவர்களும் கருதுகிறார்கள் என பன் கி மூன் கூறினார். ஐ.நா-ஆப்பிரிக்க நாடுகள் ஒன்றிய கூட்டு அமைதிக் காப்பு படைகளைப் பரவல் செய்யும் பணி சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதே வேளையில், பன்முக ஆதரவு அளிப்பதாக சூடான் அரசுத் தலைவர் பஷிரும் உத்தரவாதம் செய்துள்ளார் என்றும் பன் கி மூன் தெரிவித்தார்.
|