சீனாவின் CHONGQING நகரில் நடைபெற்று வரும் ஆசிய இளம் மகளிர் கால்பந்து போட்டியின் B பிரிவின் 2வது சுற்று ஆட்டங்கள் 7ம் நாள் முடிவடைந்தன.
சீன அணி, சீன தைபெய் அணியை 5-0 என்ற கோல் கணக்கில் வென்றது. தென்கொரிய அணி, தாய்லாந்து அணியை 3-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது. இப்போட்டிகளுக்கு பிறகு, சீனாவும் தென்கொரியாவும் அரை இறுதி போட்டியில் நுழைந்தன.
போட்டியின் விதிக்கு இணங்க, இப்போட்டியில் முதல் 3 இடங்கள் பெற்ற அணிகள், அடுத்த ஆண்டு சிலியில் நடைபெறும் உலக இளம் மகளிர் கால்பந்து போட்டிக்கான தகுதி பெறும்.
|