• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-11-01 14:31:33    
உலகில் ஐந்தில் ஒரு தொழிலாளிக்கு நீண்டநேரப் பணி

cri
உலகில் 60 கோடி தொழிலாளர்கள் அல்லது ஐந்தில் ஒரு தொழிலாளி, நீண்ட நேரம் பணி்யாற்றுவதாக, சர்வதேச தொழிலாளர்கள் அமைப்பு நடத்திய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

நிர்ணயிக்கப்பட்ட பணி நேரமான வாரத்திற்கு 48 மணி நேரம் என்ற கால அளவைவிட, உலக தொழிலாளர்களில் 22 விழுக்காட்டினர், நீண்ட நேரம் பணியாற்றி வருவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

50க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. முதல்முறையாக வளரும் நாடுகளின் கொள்கைகளும், ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

வளரும் நாடுகளில் வேலை நேரத்தை குறைப்பதில் முன்னேற்றம் காணப்பட்ட போதிலும், ஆய்வின் ஒட்டு மொத்த முடிவுகள், கவலை தருவதாகவே உள்ளன என்று சர்வதேச தொழிலாளர்கள் அமைப்பைச் சேர்ந்த மூத்த ஆய்வு அதிகாரி ஜோன் மெஷன்ஜர் தெரிவித்துள்ளார்.

2005ஆம் ஆண்டு புள்ளிவிபரங்களின் படி, தொழிலாளர்கள், கூடுதல் நேரம் பணியாற்றும் நாடுகளின் பட்டியலில், பெரு நாடு முதலிடத்தில் இருந்தது. அந்நாட்டில் 50.9 விழுக்காட்டுத் தொழிலாளர்கள், அதிக நேரம் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அடுத்தபடியாக, தென் கொரியாவில் 49.5 விழுக்காட்டுத் தொழிலாளர்களும், தாய்லாந்து மற்றும் பாகிஸ்தானில் முறையே 46.7, 44.4 விழுக்காட்டுத் தொழிலாளர்களும் கூடுதல் நேரம் பணியாற்றுகின்றனர். வளர்ந்த நாடுகளில், கூடுதல் நேரம் பணியாற்றுவோரின் விழுக்காடு, குறைவாக உள்ளது.

அதிக நேரம் பயணம் செய்தால்,

ரத்தக் கட்டு ஏற்படும்.

நாள்தோறும் 4 மணி நேரத்துக்கும் மேல் பயணம் செய்வோருக்கு, ரத்தக் கட்டு ஏற்பட்டு, உயிருக்கு ஆபத்து நேரிடலாம் என்று புதிய மருத்துவ ஆய்வு எச்சரிக்கிறது. உலக சுகாதார அமைப்பின் ஆதரவில் நடந்த ஆய்வில் இந்தத் தகவல் கிடைத்திருக்கிறது.

விமானம், தொடர் வண்டி, பேருந்து, மகிழுந்து என்று எந்த வகை வாகனமாக இருந்தாலும், நாளும் 4 மணி நேரத்துக்கும் மேல், அதிலேயே உட்கார்ந்த படி பயணம் செய்தால் இந்த ஆபத்து ஏற்படும்.

கை, கால்களை அசைக்க முடியாமல் இருக்கையிலேயே உட்கார்ந்து நீண்ட நேரம் பயணம் செய்வோருக்கு உடலில் ரத்த ஓட்ட வேகம் குறைகிறது. முதல் கட்டமாக, அவர்களுக்கு காலில் ரத்தம் கட்டிக்கொள்கிறது. சில நாட்களுக்கு, வாரங்களுக்கு அல்லது திங்களுக்குப் பிறகு, அந்த ரத்தக் கட்டு, ரத்தக்குழாய் வழியாகவே, உடலின் மேல் பகுதிக்குச் சென்று, நுரையீரலை அடைகிறது. அங்கு ரத்த ஓட்டத்தை அடைத்து, சிக்கலை ஏற்படுத்துகிறது. இந்த வகையில் அது உயிருக்கு ஆபத்தை விளைக்கிறது.

இந்த ஆபத்திலிருந்து தப்பிக்க வேண்டும் என்றால், பயணத்தின் போது உட்கார்ந்து கொண்டே இருக்காம்ல உள்ளேயே அவ்வப்போது நடந்து செல்ல வேண்டும். அது முடியாவிட்டால் அமர்ந்த இடத்திலிருந்தபடியே குதிகால்களை மேலும் கீழுமாக அசைத்து ரத்த ஓட்டத்தைத் தடையில்லாமல் செய்யலாம்.