• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-11-14 17:03:51    
மெழுகுவத்தி

cri

ஜின் பகுதியை பொறுப்பெற்றிருந்த பிரபுவின் பெயர் பிங். கோமகன் பிங்கிற்கு வயதாகிக்கொண்டிருந்தது. ஒரு நாள் அவர் தன்னுடன் இருந்த கண்பார்வையற்ற இசைக்கலைஞரான ஷு குவாங்கிடன், எனக்கு 70 வயதாகிறது. எனக்கு கல்வி கற்கவும், புத்தகங்கள் வாசிக்கவும் மிக மிக ஆசையாய் இருக்கிறது. ஆனால் இந்த ஆசையும், எண்ணமும் காலம் கடந்து வருவதாகவே நினைக்கிறேன் என்றார்.

அதற்கு கண்பார்வையற்ற ஷு குவாங் " ஏன் நீங்கள் மெழுகுவத்தியை ஏற்றிக்கொள்ளக்கூடாது? என்று கேட்டான்.

இதைக் கேட்ட கோமகன் பிங், தனது வயதை ஷு குவாங் கிண்டலடிக்கிறார் என்று நினைத்து, என் ஆளுகையின் கீழுள்ள ஒரு மனிதன் நீ, உன் பிரபுவையே கிண்டலடிக்க உனக்கு என்ன துணிச்சலிருக்கும் என்றார்.

அதற்கு ஷு வுவாங், பிரபுவே, கண்பார்வையற்ற நானா உங்களை கிண்டலடிக்க போகிறேன்? ஆனால் நான் அறிந்தவரை, ஒருவன் தனது இளமையில் கல்வி கற்க விரும்பினால், அவனது எதிர்காலம் காலை நேரச் சூரியனை போல் ஒளிமயமாயிருக்கும். அவன் தனது நடுத்தர வயதில் கல்வில் மீது நாட்டம் கொண்டால் அது நண்பகம் நேர சூரியனை போல, அதுவே அவன் தனது முதுமைக்காலத்தில் கல்வியில் நாட்டம் கொண்டால் அது மெழுவத்தியில் ஒளியை போல. மெழுவத்தியின் ஒளி அவ்வளவு நிறைவாய் இல்லாதபோதும், இருட்டில் ஏதும் தெரியாமல் தடுமாறுவதை விட மேல் அல்லவா? என்றாராம்.

கோமகன் பிங், ஷு குவான் சொன்ன விளக்கத்தின் பொருள் உணர்ந்து, அவர் கூறியதை ஏற்றுக்கொண்டான்.