• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-12-04 14:57:29    
Zheng Yang வாயில்

cri

சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கிலுள்ள Zheng Yang வாயில், Qian men வாயில் என அழைக்கப்படுகிறது. இது, மிங் மற்றும் சிங் வம்சங்களில், பெய்ஜிங் மாநகரின் மையமான முக்கிய தென்புற வாயிலாகும். 1419ம் ஆண்டு, இது கட்டியமைக்கப்படத் துவங்கியது. 1439ம் ஆண்டு, Jian men வாயிலும், Weng cheng நகரும் கட்டியமைக்கப்பட்டன.

1420ம் ஆண்டு, மிங் வம்சகாலத்தின் பேரரசர் Zhu Di, பெய்ஜிங்கை தலைநகராக அறிவித்த பின், பெய்ஜிங்கில், பெருமளவிலான நகர் மாளிகையின் கட்டுமானத்தை நடத்தினார். 1439ம் ஆண்டு, நகர் மாளிகையின் கட்டுமானம் முடிந்தது. Zheng Yang வாயில், பெய்ஜிங்கின் 9 நகர் வாயில்களில், முக்கிய வாயிலாக கருதப்படுகிறது. இதுவே அனைத்திலும் மிக உயரான வாயிலுமாகும்.

Zheng Yang வாயிலின் தென் பகுதியில், மக்கள் அதிகமாகக் கூடி வாழ்ந்ததால், பரபரப்பான Qian men வணிகப் பகுதியாக இருந்தது. மிங் வம்சகாலத்தில், முழு நகரின் முக்கிய வணிக மற்றும் சேவைத் தொழில் பணிமனைகள் முதலியவை, இங்கு உள்ளன. பல பழங்கால நூல்கள், இங்குள்ள பரபரப்பான வணிகக் காட்சியை பதிவாக்கியுள்ளன.

Zheng Yang வாயிலின் வட பகுதியிலுள்ள நகர் மாளிகைக்கும், தென் பகுதியிலுள்ள Jian lou மாளிகைக்கும் இடையில், மேல்வளைவான நகர் சுவர்களால் இணைக்கப்பட்டன. இவ்விணைப்பு, Weng Cheng நகர் என அழைக்கப்படுகிறது. இந்நகரில், கோயில் இருக்கிறது. கிழக்குப் பகுதியில், Guanyin சிலையும், மேற்குப் பகுதியில் Guandi சிலையும் நிறுவப்பட்டுள்ளன. Jian lou மாளிகையில், மிங் மற்றும் சிங் வம்சகாலங்களில் தீ விபத்து இரு முறை நிகழ்ந்தது. பின்னர், இது சீரமைக்கப்பட்டது. ஆனால், 1900 மற்றும் 1901ம் ஆண்டுகளில், எட்டு வல்லரசுகள் பெய்ஜிங்கைத் தாக்கிய போது, இரு கட்டடங்கள், சீர்குலைக்கப்பட்டன. 1903 முதல், 1906ம் ஆண்டு வரை, Zhengyang வாயில் மற்றும் Jian lou மாளிகை செப்பனிடப்பட்டன. 1914ம் ஆண்டு, Wengcheng நகர் நீக்கப்பட்டது. 1915ம் ஆண்டு, நகரின் உட்புற மற்றும் வெளிபுற போக்குவரத்தை மேம்படுத்துவதற்காக, அரசு, Zhengyang வாயிலின் Jianlou மாளிகையைச் சீரமைத்தது.

1988ம் ஆண்டு, Zheng yang வாயில், நாட்டின் முக்கிய தொல்பொருள் பாதுகாப்புப் பிரிவாக உறுதிப்படுத்தப்பட்டது.