• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-01-16 15:27:00    
தவற்றை ஒப்புக்கொள்ளாதவன்

cri
முன்பொரு காலத்தில் ச்சு நாட்டில் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு இஞ்சி எங்கே விளைகிறது என்று தெரியாது. இஞ்சி மரத்தில் காய்க்கிறது என்று நினைத்தான் அந்த மனிதன். ஒரு முறை அவனிடம் இஞ்சி நிலத்தின் அடியில் விளைகிறது என்று ஒருவன் கூறினானாம். ஆனால் நம்மவருக்கு அதில் நம்பிக்கையில்லை. இஞ்சி நிலத்தின் அடியில் விளைகிறது என்று சொன்னவனிடம், இல்லை, நான் நம்பமாட்டேன். உன்னிடம் என் கழுதையை பந்தயமாக வைக்கிறேன். நாம் போய் விசாரிப்போம், நீ சொல்வது சரியென்று உறுதியானால், என் கழுதையை நீயே வைத்துக்கொள்ளலாம் என்று சொன்னானாம் நம்மவன். இருவரும் பத்து பேரிடம் கேட்பது, பத்து பேருமே மற்றவன் சொன்னது போல இஞ்சி நிலத்தினடியில்தான் விளைகிறது என்று சொன்னால், பந்தயமாக வைக்கப்பட்ட கழுதையை அவன் பெறலாம் என்று இருவரும் தீர்மானித்தனர்.
இருவரும் புறப்பட்டு பத்து பேரிடம் சென்று இஞ்சி எங்கே விளைகிறது, நிலத்திற்கு கீழா அல்லது நிலத்திற்கு மேல் செடியிலா என்று கேட்டனர். விசாரித்த பத்து பேரும், இஞ்சி நிலத்தினடியில்தான் விளைகிறது என்று கூறினர். நம்மவருக்கு தோல்வி, இருப்பினும், இஞ்சி நிலத்திற்கு அடியில் விளைகிறது என்று கூறிய, தான் பந்தயம் கட்டிய மற்றவனிடம், சரி சரி, நீ என் கழுதையை வைத்துக்கொள். ஆனால் என் கருத்தில் மாற்றமேதுமில்லை. எனக்கு நன்றாக தெரியும் இஞ்சி மரத்தில்தான் காய்க்கிறது என்றானாம்.