கடந்த ஆண்டின் இறுதியில், சீன திபெத் தன்னாட்சிப் பிரதேசம், 9 ஆண்டுகால கட்டாய கல்வியை பரவலாக்கியுள்ளது. இளைஞர்கள் மற்றும் நடுத்தர வயதினரிடையே எழுத்தறிவின்மையை, அது அடிப்படையில் ஒழித்தது.
அண்மையில், திபெத் தன்னாட்சிப் பிரதேச அதிகார வட்டாரத்திலிருந்து இத்தகவல் கிடைத்துள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில், திபெத்தில் வட்டங்கள் ரீதியான 400க்கும் அதிகமான பள்ளிகளின் சீரமைப்பு திட்டங்களின் மூலம், சுமார் 40 ஆயிரம் மாணவர்களின் கல்வி மற்றும் குடியிருப்பு பிரச்சினை, தீர்க்கப்பட்டுள்ளது. அத்துடன், திபெத், பள்ளிகளின் நிலையை பாடுபட்டு மேம்படுத்தியது. கடந்த ஆண்டின் இறுதியில், 95 விழுக்காடு துவக்கப் புள்ளிகள் கல்வியளிக்கும் இடங்களில், நவீனமயமாக்கப்பட்ட கல்விச் சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
|