ஒரு நாள் பணக்காரன் ஒருவனும் ஏழை ஒருவனும் பேசிக்கொண்டிருந்தனர். பணக்காரன் ஏழையை பார்த்து " என்னிடம் 100 பொற்காசுகள் உள்ளன. உனக்கு அதில் 20தை தருகிறேன். தந்தால் என்னை புகழ்ந்து பேசுவாயா?" என்று கேட்டான். அதற்கு ஏழை நீ 20 பொற்காசுகளை தருவதால் என்ன லாபம், நமது ஏற்றத்தாழ்வு குறையவா போகிறது? பிறகு எதற்கு உன்னை புகழ்வது" என்று கேட்டான். பணக்காரன், சரி ஒருவேளை நான் என்னிடம் ஒருக்கும் 100 பொற்காசுகளில் பாதியை உனக்கு தந்தால்? அப்போது நீ என்னை புகழுவாயா?" என்று கேட்டான். அதற்கு ஏழை நீயும் நானும்தான் சரி நிகராகி விடுவோமே? பிறகு எப்படி நான் உன்னை புகழ்வேன் என்று கூற, பணக்காரன் "சரி, என்னிடமுள்ள அனைத்து பொற்காசுகளையும் உனக்கே தந்து விடுகிறேன். அப்போதாவது என்னை புகழ்ந்து பேசுவாயா?" என்று கேட்டானாம். அதற்கு அந்த ஏழை புன்முறுவலுடன் " எனக்கே அனைத்து பொற்காசுகளும் சொந்தமாகிவிட்டால், உன்னை ஏன் நான் புகழவேண்டும்? அதற்கு தேவைதான் என்ன? என்றானாம்.
|