தற்போது, திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் லா சா நகரின் நிலைமை அமைதியாகியுள்ளது. சமூக ஒழுங்கு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் சின் காங் இன்று பெய்சிங்கில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் இவ்வாறு கூறினார்.
சட்டப்படி, அண்மையில் லாசா நகரில் நிகழ்ந்த வன்முறை குற்றச்செயலைத் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் தொடர்புடைய வாரியங்கள் கையாண்டுள்ளன என்று சின் காங் கூறினார். தலாய் லாமா குழு லாசாவில் அழிவு நடவடிக்கைகளை திட்டமிட்டு, வேண்டுமென்றே தூண்டிவிட்டதைப் பல சான்றுகள் கோடிட்டுக்காட்டுகின்றன. தொடர்புடைய நாடுகளும் சர்வதேச அமைப்புகளும் உண்மைகளுக்கு மதிப்பு அளித்து, நீதியின் பக்கம் நிற்க வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார்.
|