ஒலிம்பிக் புனிதமான தீப்பிழம்பு தொடரோட்டத்தைச் சீர்குலைக்கும் எந்த முயற்சிகளும், தோல்வியடைய வேண்டும் என்று இன்று சிங்குவா செய்தி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
ஒலிம்பிக் தீபத் தொடரோட்டம், புனிதமான விழாவாகும். பரபரப்பான செய்திகளை உருவாக்கும் வகையில், ஏறகுறைய அனைத்து ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளிலும் தீபத் தொடரோட்டம், சில அமைப்பு மற்றும் நபர்களால் தலையிடப்பட்டு, சீர்குலைக்கப்பட்டன.
ஒலிம்பிக் தீபம் மனித குலத்தின் எதிர்கலாத்தை ஒளியேமான தாக்கும் அதே வேளையில், சில அமைப்புகள் மற்றும் சிலரின் உண்மையான சாராம்சத்தையும், அவர்கள் ஈடுபடுவதாக கூறப்படும் இலட்சியம் மற்றும் இயக்கத்தின் உண்மையான சாராம்சத்தையும் வெளியிட்டது. மனித குலத்தின் நீதியான ஆற்றலை ஒலிம்பிக் புனித பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இதைச் சீர்குலைக்கும் எந்த முயற்சிகளும், தோல்வியடையயும் என்று இவ்வறிக்கை தெரிவித்தது.
|