லாசாவில் நிகழ்ந்த சம்பவத்தின் மீதான உண்மையில்லாத செய்திகள்
cri
"மார்ச்.14" லாசாவில் நிகழ்ந்த அடிதடி, சீர்குலைத்தல், கொள்ளையடித்தல் மற்றும் தீயால் நாசமாக்குதல் போன்ற வன்செயல்கள் பற்றிய மேலை நாடுகளின் செய்தி ஊடகங்கள் திரித்து வெளியிட்ட உண்மையில்லாத செய்திகளைச் சீனச் செய்தி பணியாளர் சங்கம் வெளியிட்ட அறிக்கை வன்மையாகக் கண்டித்தது. லாசா சம்பவம் பற்றி மேலை நாடுகளின் செய்தி ஊடகங்கள் செய்திகளை வெளியிடுவதில், செய்தி பணியாளர்களின் தொழில் ஒழுக்கத்தை அடிப்படையில் மீறியுள்ளன. எடுத்துக்காட்டாக, அவைகள் புகைப்படங்கள் மீது தொழில் நுட்பத்தைக் கையாண்டதோடு எண்ணிக்கையில் உண்மையையும் மிகைப்படுத்தின என்று இந்த அறிக்கை கூறுகின்றது. சீனச் செய்திப் பணியாளர்களின் செய்தி தொழில் ஒழுக்கத்தின் கட்டுமானத்தில் சீனச் செய்தியாளர் சங்கம் எப்போதும் கவனம் செலுத்தி வருகின்றது. அதற்கு சளையாத முயற்சி மேற்கொண்டு வந்துள்ளது என்று அறிக்கை கூறுகிறது.
|
|