• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-04-02 09:24:41    
லூஷானின் பிரபு

cri
ஷாங் பு என்பவர் வூ என்ற இடத்தின் ஆளுனராக இருந்தார். அவருக்கு குங்ஷு என்ற ஒரு பெயரும் உண்டு. ஆனால் அவர் எந்த இடத்தைச் சேர்ந்தவர் என்பது யாருக்கும் தெரியாது ஒரு முறை ஷாங் பு வூவிலிருந்து தலைநகர் நோக்கி தன் குடும்பத்தினரோடு செல்கையில் லூஷானை கடக்க நேரிட்டது. லூஷானில் அவரது பிள்ளைகள் மலை மீதிருந்த ஒரு கோயிலுக்கு சென்று சுற்றி பார்த்தனர். அவ்வமயம் ஷாங் புவின் வீட்டு பணிப்பெண் கோயிலுள்ள கடவுள் உருவத்தை சுட்டிக்காட்டி ஷாங் புவின் மகளை பார்த்து "இந்த கடவுளுக்குத்தான் உன்னை மணமுடிக்க போகிறோம்" என்று கிண்டலடித்தாள்.
அன்று இரவு ஷாங் புவின் மனைவி ஒரு கனவு கண்டாள். லூஷானின் பிரபு அவள் கனவில் தோன்றி "என் மகனோ ஒன்றுக்கும் பயனில்லாத் உதவாக்கரை. அவனை உங்கள் மருமகனாக நீங்கள் தெரிவு செய்ததற்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். என் நன்றியை தெரிவிக்க இதோ இந்த பரிசுகளைக் கொண்டுவந்துள்ளேன்" என்று கூற திடுக்கிட்டு விழித்தாள் ஷாங் புவின் மனைவி. கோயிலில் நடந்ததை பணிப்பெண் கூறியதை கேட்டதுடன் தன் கனவையும் தொடர்பு படுத்திய அவள், உடனே அவ்விடம் விட்டு புறப்படுமாறு தன் கணவனை வற்புறுத்தினாள்.
ஆகவே ஷாங் புவும் தனது பெரிய படகில் அமர்ந்து தனது உடைமைகளையும் கட்டிக்கொண்டு புறப்பட்டான். ஆற்றின் போக்கில் சென்றுகொண்டிருக்கையில் திடீரென படகு நின்றது. எடை குறைந்தால் படகு மீண்டும் செல்லமுடியும் என்றெண்ணி தனது உடமைகளில் பலவற்றை ஆற்றில் வீசினார் ஷாங் பு. ஆனாலும் படகு அசைந்தபாடில்லை. "கடவுளின் விருப்பம் என்னவென்பது தெளிவு, ஒரு பிள்ளைக்காக ஏன் ஒரு குடும்பத்தையே இழக்கவேண்டும்" என்று யாரோ ஒருவர் அவருடைய மகளை ஆற்றில் வீசினால் ஒருவேளை படகு புறப்படக்கூடும் என்ற கருத்தில் யோசனை சொன்னார்கள். அதைக் கேட்ட ஷாங் பு "அந்த கொடுமையை என் கண்களால் நான் பார்க்க மாட்டேன்" என்று கூறி மனமில்லாமலேயே தன் மனைவியிடம் தங்கள் மகளை ஆற்றில் வீசும்படி கூறி சோகத்துடன் இடிந்து உட்கார்ந்தார்.
ஷாங் புவின் மனைவி கணவன் சொன்னதை போல் அவர்களது மகளை ஆற்றில் வீசாமல், ஷாங் புவின் இறந்துபோன சகோதரனின் மகளை ஆற்றில் வீச முடிவெடுத்து, ஒரு பாயை ஆற்றில் போட்டு அதில் அந்த பெண்ணை அமர வைத்தாள்.
உடனே படகும் மெல்ல நகரத் தொடங்கியது. படகு நகரத்தொடங்கியதை எழுந்து நின்று பார்த்த ஷாங் பு, படகில் தனது மகள் இன்னும் இருப்பதைக் கண்டு, தான் கூறியதை போல் தங்கள் மகளை ஆற்றில் வீசாமல் தன்னுடைய இறந்துபோன சகோதரனின் மகளை வீசினாள் தன் மனைவி என்று அறிந்து கடுங்கோபமுற்றான். இதென்ன கொடுமை இனி எப்படி நான் இந்த உலகத்தில் நடமாட முடியும் என்று கதறியபடி, தன் மகளை தூக்கி ஆற்றில் வீசினான். அதன் பின் படகு வேகமாக சென்றது. ஆற்றை கடந்து படகு மறு கரைக்கு சென்றபோது அங்கே தனது மகளும், தனது சகோதரனின் மகளும் ஒரு அரச அதிகாரியுடன் நின்றிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார் ஷாங் பு.
அந்த அதிகாரி "நான் லூஷான் பிரபுவின் உதவியாளன். உங்களுக்கு அவர் தனது நன்றிகளை பகிர்ந்துகொள்ளுமாறு கூறினார். மனிதர்களின் பிள்ளைகள் இறவா பிறப்புகளை மணமுடிக்க இயலாது என்பது லூஷான் பிரபுவுக்கு தெரியும் என்பதையும் உங்களிடம் கூறச் சொன்னார். மேலும் இறந்துபோன உங்கள் சகோதரர் மட்டில் நீங்கள் காட்டிய நேர்மையான அன்பையும், பற்றையும் கண்டு லூஷான் பிரபு மிகவும் ஈர்க்கப்பட்டார். எனவே உங்கள் பிள்ளைகள் இருவரையும் உங்களிடமே திரும்ப அனுப்பினார்" என்றார்.
பின்னர் ஷாங் பு தன் மகளையும் தன் சகோதரரின் மகளையும் என்ன நடந்தது என்று கேட்டபோது, தாங்கள் ஏதோ நகரத்தில் அழகான கட்டிடங்களையும், அதிகாரிகளையும் பார்த்ததாக சொன்னார்களே தவிர, தாங்கள் தண்ணீருக்குள் இருந்ததாக உணர்ந்ததாக கூறவில்லை.