2008ம் ஆண்டு, சீனாவின் திபெத்தின் ஆண்டுக்கான நிதி வரவு செலவு, வேளாண்துறை, கிராமப்புறம் மற்றும் விவசாயிகளில் 207 கோடி யுவானை ஒதுக்கீடு செய்யத் திட்டமிட்டுள்ளது. கடந்த ஆண்டில் இருந்ததை விட, 29.5 விழுக்காடு அதிகம்.
திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் 28 இலட்சம் மக்களில், 80 விழுக்காட்டுக்கு மேற்பட்டோர், ஆயர்கள் மற்றும் விவசாயிகள் ஆவர். சில ஆண்டுகளால், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி, அவர்களின் வருமானத்தை அதிகரிப்பது, திபெத் பொருளாதாரச் சமூக வளர்ச்சிக்கான முதன்மை கடமை ஆகி வருகிறது.
2010ம் ஆண்டுக்குள், இப்பிரதேசத்தில், 80 விழுக்காட்டுக்கு மேற்பட்ட ஆயர்கள் மற்றும் விவசாயிகள், பாதுகாப்பான, வசதியான வீடுகளில் தங்கியிருக்கலாம் என்று திபெத் திட்டமிட்டுள்ளது.
|