பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் தீபத் தொடரோட்டத்தின் சீனாவிலான பகுதி, மே திங்கள் 4ம் நாள் முதல் ஆகஸ்டு திங்கள் 8ம் நாள் வரை நடைபெறவுள்ளது. சீனப் பொது பாதுகாப்பு அமைச்சகத்தின் ஒலிம்பிக் பாதுகாப்புப் பணிக்குழு அண்மையில் இது கொடர்பாக பல்வேறு இடங்களின் பொது பாதுகாப்பு ஆணையங்களுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. போக்குவரத்து பாதுகாப்புப் பணியை முழுமூச்சுடன் மேற்கொண்டு, உள் நாட்டிலான தீபத் தொடரோட்டம் பாதுகாப்பாக தடையின்றி நடைபெறுவதை உத்தரவாதம் செய்ய வேண்டும் என்று இவ்வறிக்கையில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
|