• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-04-21 09:48:56    
பெய்சிங் ஒலிம்பிக் தீபத் தொடரோட்ட நகரான இஸ்லாமாபாத்

cri
இஸ்லாமாபாத், பாகிஸ்தானின் தலைநகரமாகும். இது, பாகிஸ்தான் வடகிழக்கு பகுதியில் கடல் மட்டத்திலிருந்து 600 மீட்டர் உயரமுள்ள பீடபூமியில் அமைந்துள்ளது. இதன் பரப்பளவு 909 சதுர கிலோமீட்டராகும். அந்நகரின் மக்கள் தொகை சுமார் 10 இலட்சத்து 40 ஆயிரமாகும். அது, நல்ல காலநிலையையும் எழில் மிக்க இயற்கைக் காட்சிகளையும் கொண்டுள்ளது. உலகில் மிக இளைய தலைநகரங்களில் இதுவும்

ஒன்றாகும். பாகிஸ்தான் அரசு 1959ம் ஆண்டில், இங்கே புதிய தலைநகரை கட்டியமைக்க முடிவு செய்தது. 1961ம் ஆண்டு, இதற்கான பணிகள் துவங்கியது. 1970ம் ஆண்டு இது அடிப்படையில் கட்டி முடிக்கப்பட்டது. பாகிஸ்தானின் அரசியல் மையமாக இஸ்லாமாபாத் மாறியது.
2008ம் ஆண்டு பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் புனிதத் தீபம், 16 ம் இஸ்லாமாபாத் சென்றடைந்தது
பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் போது, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை உபசரிக்கும் ஒலிம்பிக் குடும்பங்கள் எனும் நடவடிக்கை 11ம் நாள்

பன்முகங்களிலும் துவங்கியது. இந்த நடவடிக்கையில் ஓராயிரம் குடும்பங்கள் சேர்க்கப்படும். பெய்சிங் சுற்றுலா துறை ஆணையத்தின் துணைத் தலைவர் Xiong Yumei அம்மையார் 10ம் நாள் செய்தி ஊடகங்களிடம் இத்தகவலை வெளியிட்டார்.
பெய்சிங் மாநகரம்-வட்டாரத்தை சேர்ந்த குடும்பங்கள் இதில் சேர்க்கப்படும். ஏப்ரல் 30ம் நாளுடன், விண்ணப்பப் பணி முடிவடையும் என்று Xiong Yumei அம்மையார் கூறினார்.
ஒலிம்பிக் குடும்பங்கள், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை முக்கியமாக உபசரிக்கும். விண்ணப்பப் பணிகள் முடிவடைந்த பின், தேர்ந்தெடுக்கப்பட்ட பொருத்தமான

குடும்பங்களுக்கு சுற்றுலா வாரியங்கள் பயிற்சி அளிக்கும் என்றும் அவர் கூறினார்.
பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் தீபத் தொடரோட்டத்தை தொடர்ந்து நடத்த சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி முடிவு செய்வதற்கு ஆஸ்திரேலிய விளையாட்டு அமைச்சர் Kate Ellis அம்மையார் இன்று வரவேற்பு தெரிவித்தார்.
ஒலிம்பிக் தீபத் தொடரோட்டம், ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் முக்கிய பகுதியாகும் என்பதால், பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் தீபத் தொடரோட்டம் தொடர்ந்து நடத்த சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி முடிவு செய்த செய்தியை அகறிந்த பின், தாம் வரவேற்பு தெரிவித்ததாக அவர் கூறினார்.

பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் புனிதத் தீபம் ஆஸ்திரேலியாவுக்கு வந்த பின், ஒலிம்பிக் மற்றும் வீரர்களில் கவனம் செலுத்துவது போல் ஒலிம்பிக் தீபத் தொடரோட்டத்திலும் மக்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று Kate Ellis அம்மையார் விருப்பம் தெரிவித்தார்.
பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் தீபத் தொடரோட்டம் 24ம் நாள் Canberra நகரில் நடைபெறும்.