தலாய் லாமாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவது
cri
பேச்சுவார்த்தையை மீட்பது பற்றி தலாய் லாமா பல முறை தெரிவித்த நிலையில், அவரது தனியார் பிரதிநிதியுடன் தொடர்பு கொண்டு விவாதம் நடத்துவதென நடுவண் அரசின் தொடர்புடைய வாரியங்கள் திட்டமிட்டுள்ளன.
தலாய் லாமா மீது நடுவண் அரசு நிலையான கொள்கை மேற்கொள்கின்றது. பேச்சுவார்த்தை கதவை என்றுமே திறந்து வைக்கின்றது. விவாதம் மூலம், தாய்நாட்டைப் பிளவுப்படுத்தும் நடவடிக்கையையும் வன்முறை செயல்களைத் திட்டமிட்டுத் தூண்டுவதையும், பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியைச் சீர்குலைக்கும் நடவடிக்கையையும் தலாய் லாமா குழு உண்மையாக நிறுத்த வேண்டும் என்று நடுவண் அரசு விரும்புகின்றது. இப்படி செய்தால் தான், அடுத்த கட்ட விவாதத்தில் நுழையலாம்.
|
|