அண்மையில், திபெத் சுதந்திரம் பற்றிய இயக்கத்தின் உண்மையை வெளிப்படுத்துவதற்காக, சில மேலை நாடுகளின் நிபுணர்கள் கட்டுரைகளை வெளியிட்டனர்.
திபெத்தில் நிகழ்ந்த வென்செயல், திட்டமிட்ட விபத்தானது என்று கனடாவின் உலகமயமாக்கம் பற்றிய ஆய்வு மையத்தின் இயக்குநரும், Encyclopedia Britannicaவை இயற்றியவருமான Michel Chossudovsky கட்டுரையை வெளியிட்டு கூறினார்.
திபெத்தில் நிகழ்ந்த வன்செயல், கடந்த சில ஆண்டுகளில், அமெரிக்க அரசு சீனத் தேசிய நிதானத்தைச் சீர்குலைக்கும் நோக்கில் நடத்தப்பட்ட தீவிரமடைந்த நடவடிக்கையாகும் என்று அமெரிக்காவின் சர்வதேச அரசியல் பொருளியலாளர் F. Willian Engdahl தமது கட்டுரையில் சுட்டிக்காட்டினார்.
மேலை நாடுகள், திபெத் பிரச்சினையில் தலையிடுவது, பெரும் சூழ்ச்சியாகும் என்று ஜெர்மன் கூட்டாட்சி பாதுகாப்புப் படையின் Lieutenant Colonel Juergen Rose, unsere zeitஇல் கட்டுரை வெளியிட்டுத் தெரிவித்தார்.
திபெத்தைக் கட்டுப்படுத்தினால், சீனாவின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியும் என்று மேலை நாடுகள் கருதுவதாக, அமெரிக்காவின் தென் California பல்கலைக்கழகத்தின் அறிஞர் soraya fepahpour-ulrich தமது கட்டுரையில் தெரிவித்தார்.
|