திபெத் பிரச்சினை, இறையாண்மைப் பிரச்சினையாகும் என்று இன்று மக்கள் நாளேடு இன்று வெளியிட்ட கட்டுரையில் சுட்டிக்காட்டியது.
சில நாட்களுக்கு முன் Seattle நகரத்தில் திபெத் பிரச்சினை பற்றி தலாய்லாமா குழுவினர் பேசுகையில், நடு நிலை பாதையில் நடைபோடுவதாக உறுதிப்படுத்தினர். அப்பாதையின் உள்ளடக்கம் மற்றும் இயல்பு, திபெத் சுதந்திரமாகும். சீனாவிலிருந்து, திபெத்தைப் பிரிக்க அது முயல்கின்றது என்று இக்கட்டுரை சுட்டிக்காட்டியது.
திபெத் சீனாவுக்கு சொந்தமாக இருக்கின்ற சட்டத் தகுநிலையை மாற்றி, திபெத் மீதான சீனாவின் அரசுரிமையை மறுக்க முயல்வது, அவர்கள் கூறுகின்ற நடு நிலை பாதையின் இயல்பாகும்.
இறையாண்மை என்றால் நாட்டின் மதிப்புடன் இணைக்கிறது. சீன மக்களின் அடிப்படை நலனுடன் தொடர்புடையது. அப்பிரச்சினையில், சீனா விட்டுக்கொடுக்காது அவ்வாறு விட்டுக்கொண்டுப்பதைச், சீன மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று இக்கட்டுரை உறுதிப்படுத்தியது.
|