சீனாவின் மேற்பகுதியிலான sichuan மாநிலத்தின், wenchuan மாவட்டத்தில் நிகழ்ந்த நிலநடுக்கத்தினால், sichuan, gansu முதலிய 8 மாநிலங்களில், இன்று காலை 7 மணி வரை, மொத்தம், 9219 பேர் உயிரிழந்தனர். 5 இலட்சத்துக்கு மேலான வீடுகள் நாசமாகியுள்ளன. சீனப் பொதுத் துறை அமைச்சகத்தின் புள்ளிவிபரங்கள், இதை கூறுகின்றன.
இன்று காலை 6 மணி வரை, 16 ஆயிரத்து 7 நூற்று 60, சீனப் படையினரும், ஆயுதக்காவற்துறையினரும், அதிகாரிகளும், பேரிடர் நீக்கப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இன்னும் 34 ஆயிரம் படையினர், பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்குச் செல்லும் வழியில் இருக்கின்றனர். சீன நிலநடுக்க அவசர மீட்புதவி குழுவும், இப்பிரதேசங்களுக்கு சென்று, மீட்புப் பணியை தொடங்கியுள்ளது.
தற்போது வரை, வெளிநாட்டவர் எவரும் இந்த நிலநடுக்கத்தில் காயமடைந்ததாக தகவல் ஏதும் இல்லை.
|