இன்று பகல் 11:55 மணி வரை, சீனாவின் சிச்சுவானஅ மாநிலத்தில் நிகழ்ந்த கடுமையான நில நடுக்கத்தால், சுற்றுலா பயணம் மேற்கொண்டு வரும் அந்நிய பயணிகளில் உயிரிழப்பு பற்றிய தகவல் ஏதும் இல்லை.
சீனத் தேசிய சுற்றுலா துறையிலிருந்து இத்தகவல் கிடைத்தது.சுற்றுலா பற்றிய முன்னெச்சரிக்கை அமைப்பு முறையை இத்துறை நடைமுறைப்படுத்தி, 6 உதவி மீட்புக் குழுக்களை ஏற்பாடு செய்து, நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலான பயணியர்களுக்கு உதவி அளிக்கும் பல்வேறு பணிகளை செவ்வனே மேற்கொண்டுள்ளது.
|