• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-13 15:36:52    
சீனாவின் சிச்சுவான் மாநிலத்தில் நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் நிலைமை

cri

புள்ளி விபரங்களின் படி, 13ம் நாள் காலை 7மணி வரை, சீனாவின் மேற்கு பகுதியிலுள்ள சிச்சுவான் மாநிலத்தின் வென்சுவான் மாவட்டத்தில் நிகழந்த நில நடுக்கத்தால், சிச்சுவான், காங் சு உள்ளிட்ட 8 மாநிலங்களில் ஏறக்குறைய 10 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். 5லட்சத்துக்கு மேலான கட்டிடங்கள் இடிந்து வீழ்ந்தன.

12ம் நாள் பிற்பகல் 2:28 மணிக்கு, ரிக்டர் அளவையில் 7.8 எனப்பதிவான நில நடுக்கம் ஏற்பட்டது. இது கடுமையான நிலநடுக்கமாகும். இதற்கு பின், சீன அரசுத் தலைவர் ஹுச்சிந்தாவ் உடனடியாக முக்கிய கட்டளை வெளியிட்டார். காயமுற்றவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலுள்ள மக்களின் உயிரை பாதுகாக்க வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.

நேற்றிரவு, சீனாவின் ஆளும் கட்சியான சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினர் குழு நடத்திய கூட்டத்தில், தங்களால் இயன்ற அளவில் காயமுற்றோரை காப்பாற்றி, நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இழப்பை குறைக்க வேண்டும் என்று கோரியது.

சீன தலைமை அமைச்சர் வென்சியாபாவ் தலைமையிலான பேரிடர் நீக்கம் பற்றிய தலைமையகம் உருவாக்கப்பட்டது. வென்சியாபாவ் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் பேரிடர் நீக்கப் பணிக்கு தலைமை தாங்குகின்றார்.

இந்த நிலநடுக்கம் மிகக் கடுமையான இயற்கைச் சீற்றமாகும். பாதிக்கப்பட்ட பிரதேசங்களை ஆதரிப்பதற்காக, சீன அரசு தங்களால் இயன்ற அளவில் மனித மற்றும் பொருள் உதவியை ஏற்பாடு செய்கின்றது என்று வென் சியாபாவ் இன்று காலை தெரிவித்தார்.

நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் பேரிடர் நீக்கப் பணிக்கு உதவி அளிப்பதற்காக, 86கோடி யுவான் மதிப்புள்ள நிதியுதவி வழங்க முடிவு செய்வதாக சீன நடுவண் நிதித் துறை இன்று அறிவித்தது.

இன்று பிற்பகல் 2:57மணி வரை, பல்வேறு பேரிடர் நீக்கப் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால், நில நடுக்கத்தால், துண்டிக்கப்பட்ட உள்ளூர் போக்குவரத்து மற்றும் செய்தித்தொடர்பு, மழையால் ஏற்பட்ட கடுமையான காலநிலை ஆகியவை, மீட்புதவிப் பணிக்கு மிகப் பெரும் இன்னல்களை ஏற்படுத்தியுள்ளன என்று தெரிய வருகின்றது.

பேரிடர் நீக்கப் பணியை பன்முகங்களிலும் மேற்கொள்ளும் வகையில், 13ம் நாளிரவு 12மணிக்குள், தடைகளை அகற்றி இந்நிலநடுக்கத்தின் மையப்பகுதிக்கு செல்லும் பாதைகளை செப்பனிட்டு திறக்க வேண்டும் என்று வென் சியாபாவ் கோரிக்கை விடுத்துள்ளார்.

பேரிடர் நீக்கப் பணியில் பங்கெடுத்துள்ள சீன மக்கள் விடுதலைப் படை வீரர்கள் மற்றும் ஆயுதக் காவற்துறையினர்களின் எண்ணிக்கை ஏறக்குறைய 17ஆயிரத்தை எட்டியுள்ளது. தவிரவும், 34ஆயிரம் படை அதிகாரிகளும் வீரர்களும், பல்வேறு வழிமுறைகள் மூலம், பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்குச் சென்று

கொண்டிருக்கின்றனர்.இன்று காலை 7 மணி வரை, சீனாவின் ஆயுதக்காவற்துறையினர், நிலநடுக்கத்தில் காயமடைந்த 1800க்கு அதிகமானோரை, மீட்டுக் காப்பாற்றினர்.
இது வரை, பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலான மின் உற்பத்தி நிலையங்களின் இயக்கம் பொதுவாக நிதானமாக உள்ளது. பாதிக்கப்பட்ட பெரிய இருப்புப் பாதைகளின் இயக்கம் இயல்பாக உள்ளது. சிச்சுவான் மாநிலத்தின் Cheng Du நகரிலுள்ள Shuang Liu என்ற சர்வதேச விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

தவிரவும், இன்று பிற்பகல் 2:57மணி வரை, இந்த நில நடுக்கத்தால், சுற்றுலா பயணம் மேற்கொண்டு வரும் அந்நிய பயணிகளில் உயிரிழப்பு பற்றிய தகவல் ஏதும் இல்லை.