சிச்சுவான் மாநிலத்தின் வென் சுவான் மாவட்டத்தில் கடும் நிலநடுக்கம் நிகழ்ந்தது. சீனாவின் பல்வேறு தேசிய இன மக்கள், ஹாங்காங், மக்கௌ மற்றும் தைவான் உடன்பிறப்புகள் ஆகியோர் இதில் கவனம் செலுத்தி, முழு மூச்சுடன் உதவி செய்துள்ளனர்.
பெய்ஜிங்கிலுள்ள பல்வேறு கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில், மாணவர்கள் சுறுசுறுப்பாக இரத்தத்தானம் செய்கின்றனர். தியேன் ச்சின் மாநகர் 50 இலட்சம் யுவான் மதிப்புள்ள நிவாரணப் பொருட்களையும், 52 தொழில் நுட்பப் பணியாளர்கள் இடம்பெறும் குழு ஒன்றையும் நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு அனுப்பியுள்ளது.
He bei மாநிலமும், 50 இலட்சம் யுவான் மதிப்புள்ள நிவாரணப் பொருட்களை அங்கே அனுப்பியுள்ளது. மேலும், மீட்புதவிக் குழுகள் அங்கே செல்ல தயாராக இருக்கின்றன. நேற்று, ஹாங்காங்கின் பல்வேறு வட்டாரங்கள் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு 5 கோடி ஹாங்காங் டாலரை நன்கொடை வழங்கியுள்ளன. தவிர, Shan xin, உள்மங்கோலியா, Liao Ning, Ji lin, Shang hai, Jiang Su முதலிய இடங்களில் மக்கள் சுறுசுறுப்பாக பொருட்களையும் நிதிகளையும் திரட்டி வருகின்றனர். நேற்று மாலை 6 மணி வரை, முழு நாட்டிலும் திரட்டப்பட்ட நன்கொடைத் தொகை 22 கோடி யுவானை எட்டியுள்ளது என்று சீனப் பொதுத் துறை அமைச்சகம் கூறியது.
|