நேற்று சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய அரசியல் குழுவின் நிரந்தர கமிட்டி, கூட்டம் நடத்தி, பேரிடர் நீக்க மீட்புதவிப் பணியை ஆராய்ந்து பரவல் செய்தது. பொது செயலாளர் ஹூச்சின்தாவ் இக்கூட்டத்துக்குத் தலைமை தாங்கினார்.
இந்நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் மற்றும் காயமுற்றோர் எண்ணிக்கை மற்றும் மீட்பு சிரமங்கள் மிக அதிகமானது. பேரிடர் நீக்கப்பணி, கடுமையான அறைகூவல்களையும் சிரமங்களையும் எதிர்நோக்குகிறது. பல்வேறு இடங்கள், பேரிடர் நீக்க பணியை, தங்களது தற்போதைய தலையாய பணியாக கொள்ள வேண்டும். பொது மக்களை முதன்மை தொடுத்து மீட்க வாய்ப்பு இருந்தால் நமது, அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று இக்கூட்டம் சுட்டிக்காட்டியது. எல்லா வழிகளிலும், பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலுள்ள பொது மக்களின் வாழ்க்கையை உத்தரவாதம் செய்ய வேண்டும். உணவு கொருட்கள், குடி நீர், ஆடை, போர்வை, கூடாரம் ஆகிய பொருட்களை பாதிக்கப்பட்ட பிரதேசத்துக்கு அவசரமாக ஏற்றி செல்ல வேண்டும் என்றும் இக்கூட்டம் சுட்டிக்காட்டியது.
|