பாகிஸ்தான் தலைமை அமைச்சர் கிலானி, இன்று பாகிஸ்தானிலுள்ள சீன தூதரகத்துக்கு சென்று, சிச்சுவான் மாநிலத்தில் நிகழ்ந்த நிலநடுக்கம் குறித்து ஆறுதல் தெரிவித்தார்.
தூதரகத்தின் பணியாளர்களிடமும், இரு நாட்டு செய்தியாளர்களிடமும் பேசிய போது அவர் கூறியதாவது
நான், பாகிஸ்தான் அரசு மற்றும் மக்களுக்கு தலைமை தாங்கி, சீனாவின் பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலான மக்களுக்கு ஆறுதல் தெரிவிக்கின்றேன். உங்களை போன்று, எங்கள் மனமும் ஆழமாக புண்பட்டுள்ளது. இப்பேரிடர் நேரத்தில், பாகிஸ்தான் அரசு மற்றும் மக்கள், உங்களுக்கு ஆதரவு அளிப்பதோடு உங்களுக்கு முழுமூச்சுடன் உதவி அளிப்போம் என்றார் அவர்.
அவருக்கு முன், பாகிஸ்தான் அரசுத் தலைவர் முஷராப் சீன தூதரகத்துக்கு ஆறுதல் தெரிவித்தார்.
|