நேற்று, நிலநடுக்கப் பேரிடர் நீக்கப் பணியின் நோய் தடைக்காப்பு தொடர்பான திட்டத்தை, சீனச் சுகாதார அமைச்சகம் வெளியிட்டது. நோயைக் கட்டுப்படுத்துவதற்கான முறைமை, உணவுப் பொருட்களின் சுகாதார நிலைமை, குடிநீரின் சுகாதார நிலைமை முதலிய 9 துறைகளில், இத்திட்டம், நோய் தடைக்காப்புப் பணியை மேற்கொள்ளும்.
நிலநடுக்கத்துக்குப் பின், துவக்கக் காலத்தில், காயமுற்றோரைக் காப்பாற்றுவதை முக்கியமாகக் கொள்ள வேண்டும். அதற்குப் பின், பொதுச் சுகாதார நிலை மற்றும் தொற்று நோய் தடுப்புக் கட்டுப்பாட்டுப் பணி, பன்முகங்களிலும் நடைபெற வேண்டும் என்று திட்டம் கூறியது.
ஊரீதியான பாதிப்பைச் சமாளிக்கும் இலக்கு, கோட்பாடு, வழிமுறை மற்றும் தொழில் நுட்பத்துக்கு, திட்டம் வழிக்காட்டும்.
|