மே திங்கள் 16ம் நாள் முற்பகல், நடுவண் அரசின் நிதித் துறை, பேரிடர் நீக்கப்பணிக்கு 117 கோடி யுவான் நிதியைப் மீண்டும் ஒதுக்கிவைத்துள்ளது. மொத்தத்தில், நிலநடுக்கப் பேரிடர் நீக்க நிதி, 341 கோடி யுவானை எட்டியுள்ளது.
இந்த நிதியில் 50 கோடி யுவான், நிலநடு்க்கத்தால் பாதிக்கப்பட்ட சி ச்சுவான் மாநில மக்களின் வாழ்க்கை ஏற்பாட்டுப் பணிகளுக்கு ஒதுக்கப்படும். 35 கோடி யுவான், சி ச்சுவானின் உணவு எண்ணெய் வினியோகத்துக்கு ஒதுக்கப்படும். Gan su, sha xi, chong qing, yun nan ஆகிய மாநிலங்களின் மக்களைக் காப்பாற்றுவதற்கும் இடிந்த வீடுகளை செப்பனிடுவதற்கும் 20 கோடி யுவான் ஒதுக்கப்படும்.
|