ஐப்பானிய அரசு அனுப்பிய 31 சிறப்புத் துறை மீட்புதவியாளர்கள், இன்று காலை 3 மணிக்கு சிச்சுவான் மாநிலத்தின் chengduஐ வந்தடைந்ததும், guanzhuang மாவட்டத்துக்கு சென்று மீட்புதவி செய்ய தொடங்கினர். ஐப்பானின் இன்னும் 29 மீட்புதவியாளர்கள், இன்று மாலை chengduஐ வந்து அடைவார்கள். வெளிநாட்டு சிறப்புத் துறை மீட்புதவியாளர்கள் சீன மீட்பு பணியில் கலந்து கொள்வது, இதுவே சீன வரலாற்றில் முதன்முறையாகும். ஐப்பானிய மீட்புதவியாளர்களைத் தவிர, ரஷியா, தென்கொரியா, சிங்கபூர் ஆகிய மூன்று நாடுகள் சீனாவுக்கு மீட்புதவியாளர்களை அனுப்புவதை, சீன அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் qingang இன்று இதைத் தெரிவித்தார்.
|